ஆப்நகரம்

Iron Box Viral Video : கொரோனா பயத்தால் அயன்பாக்ஸ் பயன்படுத்தும் வங்கி ஊழியர்

கொரோனா பயம் காரணமாக வங்கி ஊழியர் ஒருவர் அயன் பாக்ஸ் பயன்படுத்தி செல்லானை அயன் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 6 Apr 2020, 10:55 am
கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தற்போது உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் அதிகமாகப் பரவி விட்டது. மக்கள் எல்லாம் கொரோானா பரவாமல் இருக்கப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் தங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என உலக சுகாதார மையம் உட்படப் பல அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
Samayam Tamil bank officer


இந்நிலையில் இந்தியாவில் வடமாநிலத்தில் உள்ள வங்கி ஊழியர் ஒருவர் அவருக்கு கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகக் கையில் கிளவுஸ் மற்றும் முகமூடியை அணிந்திருந்தார். இது மட்டுமல்ல இவர் வாடிக்கையாளர்கள் தங்களிடம் வந்து பணம், செக், செல்லான் என எதைத் தந்தாலும் அதை ஒர கம்பியில் வாங்கி அதை அயன் பாக்ஸ் வைத்து அயன் செய்து பின்னரே பயன்படுத்துகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Also Read : கொசக்சி பசபுகழுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

கொரோனா வைரசிலிருந்து தம்மைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் எந்த அளவிற்குச் செல்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் உள்ள இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி