ஆப்நகரம்

வாடிக்கையாளரிடம் ரூ3 அதிகம் வசூலித்த பாட்டா நிறுவனத்திற்கு ரூ9 ஆயிரம் அபராதம்

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை எடுத்து செல்லும் கேரிபேக்குகளை வழங்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை, ஆனால் பாட்டா நிறுவனம் அதை செய்யவில்லை காசிற்காக கேரிபேக்கை விற்பனை செய்தனர்

Samayam Tamil 15 Apr 2019, 7:32 pm
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் பிரசாத் ரத்தோரி. இவர் கடந்த பிப். மாதம் 5ம் தேதி அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு பாட்டா ஷோரூமிற்கு சென்று ஒரு ஜோடி செருப்பு வாங்கியுள்ளார். அந்த செருப்பின் விலை ரூ399 ஆனால் அவரிடம் கடைக்காரர்கள் ரூ402 வசூலித்ததாக கூறப்படுகிறது. அவர் எடுத்துச்செல்ல வசதியாக வழங்கப்படும் கேரிபேக்கிற்காக ரூ3 வசூலிக்கப்படுவதாக கடைக்காரர்கள் விளக்கம் அளித்தனர்.
Samayam Tamil பாட்டா நிறுவனத்திற்கு ரூ9 ஆயிரம் அபராதம்


இதை ஏற்றுக்கொள்ள முடியாத தினேஷ் நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி காகித கேரிபேக் வாங்க வைப்பது சேவை குறைபாட்டை காட்டுவதாக கூறியது.

மேலும் நடந்த சம்பவத்திற்காக ரூ 1000 ஆபராதம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு ஈடாக ரூ3000, மேலும் வழக்கு செலவிற்காக ரூ 5 ஆயிரம் என மொத்தம் 9 ஆயிரம் அபாராதம் விதித்து தீர்பளித்தது. மேலும் பாட்டா நிறுவனம் இனி கேரிபேக்குளை இலவசமாகவே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தினேஷ் கூறும் போது : "வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை எடுத்து செல்லும் கேரிபேக்குகளை வழங்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை, ஆனால் அவர் அதை செய்யவில்லை காசிற்காக கேரிபேக்கை விற்பனை செய்தனர். அதுவும் அந்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கேரிபேக்கை விற்பனை செய்தனர். அவர் விளம்பரத்தை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதனாலேயே நான் புகார் செய்தேன்." என கூறினார்.

அடுத்த செய்தி