ஆப்நகரம்

பட்டப்பகல்ல என்ன தூக்கம்? உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப்பி ஹாய் சொன்ன கரடி!

நீச்சல் குளம் அருகே உறங்கிக் கொண்டிருந்த ஆணை தட்டி எழுப்பிய கரடி வீடியோ, இன்டர்நெட்டில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 16 Sep 2020, 4:39 pm
வீட்டின் பின் புறம் இருந்த நீச்சல் குளத்தின் அருகே அந்த வீட்டு உரிமையாளர் ரிலாக்ஸ் செய்தபடி படுத்து உறங்கி வந்திருந்தார். அப்போது, அந்த வழியே வந்த கரடி ஒன்று, வீட்டுக்குள் நுழைந்து, நீச்சல் குளத்தில் இருந்த நீரை குடித்துவிட்டு, சுற்றி நோட்டம் விட்டபடி நடந்து வந்தது.
Samayam Tamil பட்டப்பகல்ல என்ன தூக்கம்? உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப்பி ஹாய் சொன்ன கரடி!


அப்போது தான் அந்த ஆண் உறங்கி கொண்டிருப்பதை கவனித்து அந்த கரடி. கரடிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, மெல்ல அந்த ஆண் அருகே நடந்து சென்று, அவரை அட்டாக் ஏதும் செய்யாமல். அவர் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பது போல முகர்ந்து பார்த்து அவரது கால்களை தீண்டியது. ஆரம்பத்தில் சட்டை செய்யாத அந்த ஆண். சட்டென்று விழித்துப் பார்த்தல் கால் அருகே கரடி.

உரிமையாளர் தூக்கம் களைந்து எழுந்த வேகத்தில், கரடி பயந்து வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டது. பிறகு அந்த ஆண், தனது மொபைல் மூலம் அந்த கரடியை படம் பிடிக்க துவங்குவது போல அந்த காட்சி முடிகிறது.

இந்த அணைத்து செயல்களும், அவரது வீட்டில் மாட்டியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ, ஃபேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் வீடியோ:

ஒருத்தர் சொந்த வீட்டுல மல்லாக்கப்படுத்து சொகுசா தூங்க முடியல. வீட்டுக்குள்ள பர்மிஷன் கேட்காம வந்தது மட்டுமில்லாம, பட்டப்பகல்ல என்னடா தூக்க வேண்டி கிடக்குன்னு, அவர தட்டி எழுப்பிவிட்டுட்டு ஓடி போயிடுச்சு அந்த கரடி.

அடுத்த செய்தி