ஆப்நகரம்

தினமும் 10 மணி நேரம் குளிக்கும் ஐடி ஊழியர்... காரணம் கேட்டால் பதறிப்போவீர்கள்...!

பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருக்கு தினமும் 10 மணி நேரம் குளிக்கும் வித்தியாசமான வியாதி வந்துள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 11:03 am
ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது OCD (Obsessive Compulsive Disorder) எனும் நோய் இந்த நோய் உள்ளவர்கள் நிலைமை மோசமாகி தற்கொலை வரும் செல்லும் அபாயம் கூட ஏற்படவாய்ப்புள்ளது.
Samayam Tamil தினமும் 10 மணி நேரம் குளிக்கும் ஐடி ஊழியர்


இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் இந்த நோயால் கடும் அவதிப்பட்டுள்ளார். தினமும் சுமார் 10 மணி நேரத்தைக் குளிப்பதற்காகச் செலவு செய்து வந்துள்ளார். தினமும் அதிகாலை 3 மணிக்குக் குளிக்கச் செல்லும் இவர் 6 மணி வரை குளித்துவிட்டு பின்பு வந்து தான் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் செல்வாராம். அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி ரூமிற்கு வந்ததும் 4 மணி நேரம் குளிப்பாராம். இவர் ஒரு நாள் குளிப்பதற்காக 3 சோப்பு மற்றும் ஒரு டஜன் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதை சில நாட்கள் பொறுத்துக்கொண்ட மனைவி ஒரு கட்டத்தை இவரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாகரத்து வாங்கிவிட்டு சென்றுடவிட்டார். தற்போது அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி