ஆப்நகரம்

இறுதி சடங்கில் இறந்தவரே எழுந்து வந்த அதிசயம்...!

பீகார் மாநிலத்தில் இறுதி சடங்கின் போது இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் எழுந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Sep 2019, 3:15 pm

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 49 வயதான இவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டில் உள்ளவர்கள் இவரைப் பத்திரமாகப் பார்த்து வந்தவனர்
Samayam Tamil இறுதி சடங்கில் இறந்தவரே எழுந்து வந்த அதிசயம்


இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி அவர் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் அவர் வீட்டிலிருந்து சில கி.மீ தூரம் உள்ள ஒரு ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடைப்பதாகத் தகவல் வந்தது.

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த "தீவிர" ரசிகர்

அப்பொழுது குமார் குடும்பத்தினர் அந்த பிணத்தைப் பார்த்து அது குமாரின் பிணம் தான் என உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் அந்த உடலை வாங்கி ஈமை காரியங்களில் ஈடுபட்டனர். உடலைத் தகனம் செய்து சில நாட்கள் கழித்துச் செய்யப்படும் காரியம் நடந்து கொண்டிருந்தது.

அடக்க முடியாமல் சிரித்த பெண்ணின் வாய் அப்படியே நின்று போனது! - வைரலாகும் புகைப்படம்

அப்பொழுது இறந்ததாகக் கருதப்பட்ட குமார் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் அத்தனை பேரும் ஆச்சிரியமடைந்தனர். பின்னர் தான் தாங்கள் ஈமை காரியங்கள் செய்தது வேறு ஒருவரின் பிணத்திற்கு என்பது தெரிந்தது.

காரியம் நடந்தபோது இறந்தவரே திரும்ப வந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி