ஆப்நகரம்

6 பேர் சேர்ந்து சிறுமியை சீரழித்த கொடுமை...! கடைசியில் அந்த சிறுமிக்கே தண்டனை வழங்கிய கொடூரம்...!

பீகார் மாநிலத்தில் பள்ளி சிறுமியை பேர் சேர்ந்து கற்பழத்துள்ளனர். இதற்கு நியாயம் கேட்டபோது பஞ்சாயத்தை கூட்டி அந்த சிறுமிக்கு மொட்டை போட்டு தண்டனை வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 28 Aug 2019, 6:53 pm

பீகார் மாநிலம் கயா பகுதியில் உள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் கடத்தி சென்றது. அந்த கும்பல் அந்த சிறுமியைக் கற்பழித்து இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளது.
Samayam Tamil 6 பேர் சேர்ந்து சிறுமியை சீரழித்த கொடுமை


தன் நடந்த அநியாயத்தைப் பொறுக்கமுடியாமல் அந்த சிறுமி நடந்த விஷயங்களை தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி அந்த சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டுள்ளனர்.

கொரியரில் வந்த கோப்ரா பாம்பு...! - வைரலாகும் வீடியோ

ஆனால் அந்த பஞ்சாயத்தில் அந்த சிறுமியின் மீதே தவறு இருப்பதாகக் கூறி அந்த சிறுமிக்கு மொட்டையடித்து தண்டனை வழங்கியுள்ளனர். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததும் அவர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் அந்த சிறுமியைக் கற்பழித்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் ஆனால் பஞ்சாயத்தில் அந்த சிறுமிக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லி அந்த சிறுமியை மொட்டையடிக்க வைத்த 4 பேரைக் கைது செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

Bigg Bossல் இருந்து விலகுகிறாரா கமல்? சீசன்4 ஐ தொகுத்து வழங்க போவது சிம்புவா?

சிறுமியைக் கற்பழித்ததற்குப் பஞ்சாயத்தைக் கூட்டி அதில் அந்த சிறுமிக்கே தண்டனை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி