ஆப்நகரம்

பாலிவுட் நடிகையை கண்ணாலேயே கற்பழித்த ஓட்டல் மேனேஜர்; வைரலாகும் வீடியோ

பாலிவுட் நடிகை ஈஷா குப்தா வை ஓட்டல் மேனேஜர் ஒருவர் கண்ணாலேயே கற்பழித்தாக குற்றம்சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைரலான சம்பவம்.

Samayam Tamil 8 Jul 2019, 8:05 pm
பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஈஷா குப்தா, இவர் கடந்த 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டத்தையும் பெற்றவர். தற்போது பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துவரும் இவர் சமீபத்தில் தனது இஸ்டாகிராமில் வைத்த ஸ்டோரி வைத்து வைரலாகியுள்ளது.
Samayam Tamil ஈஷா


இவர் டில்லியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஒரு பார்ட்டிற்காக சென்றுள்ளார். அங்கிருந்தவர் ஒருவர் இவரை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் தர்ம சங்கடம் ஏற்பட்டு ஈஷா குப்தா அந்த ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்.
இது குறித்து ஈஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "டில்லியில் அந்த ஓட்டலுக்கு செல்லும் போது அங்கிருந்த மேனேஜர் என்னை கண்ணாலேயே கற்பழித்தார். இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இது எனக்கு தர்மசங்கமாக இருந்ததால் அங்கிருந்து வந்துவிட்டேன். உங்களுக்கு இந்த எதிர்கால ரேப்பிஸ்ட் யார் என தெரியுமா" என கேட்டி ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்
இந்நிலையில் அதை பார்த்த அவரது பாலேயர், குறிப்பிட்ட அந்த நபர் யார் எனவும், அவரது புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். அதையும் வெளியிட்ட ஈஷா, அவரது பெயர் ரோஹித் விக் என குறிப்பிட்டு தனக்கு நடந்த கொடுமையை விளக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகையை ஒருவர் கண்ணாலேயே கற்பழித்த சம்பவம் தற்போது பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி