ஆப்நகரம்

தந்தை உயிர் போகும் வேளையில் மகன் செய்த இந்த காரியம் உங்களை வியக்க வைக்கும்

கர்நாடகா மாநிலம் ஹூலியரு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வாகனம் ஓட்டும் போது உயிரிழந்துவிட்டார். அப்பொழுது சதூர்யமாக செயல்பட்ட அவரது மகனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Samayam Tamil 6 May 2019, 4:38 pm
கர்நாடகா மாநிலம் ஹூலியரு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சரக்கு வாகன ஓட்டுநராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி , 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். மனைவி ஒரு கார்மெண்ட்ஸில் பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil உயரிழந்த சிவக்குமாருடன் அவரது மகன்


இந்நிலையில் கடந்த மே1ம் தேதி சிவக்குமார் ஹூலியரு பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவு உள்ள ஒரு பகுதிக்கு தனது வாகனத்தில் சரக்குகளை ஏற்றி கொண்டு டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
Read More: ரூ14,500 பணத்தை விழுங்கிவிட்டு எதுவுமே நடக்காதது போல் அப்பாவி லுக் விட்ட நாய்...!

தன் மகனுக்கு பள்ளியில் கோடை விடுமுறை விட்டுவிட்டதால் வீட்டில் அவன் தனியாக இருக்க வேண்டாம் என தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். டெலிவரி செய்யும் பகுதியை நெருங்கும் போது சிவக்குமாருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. டிராபிக்கில் அவர் வாகனம் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது அவர் நெஞ்சுவலியில் துடிக்க ஆரம்பித்தார்.

இதை கவனித்த அவரது மகன் தன் தந்தைக்கு என்ன செய்கிறது என தெரியாமல் முழித்தான். அப்பொழுது அவர் ஓட்டிக்கொண்டிருந்த வாகனம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் அதை சிவக்குமாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
Read More: 4வது முறையாக திருமணம் செய்த 66 வயது தாய்லாந்து மன்னர்

இதை நொடிப்பொழுதில் உணர்ந்த அவரது மகன் உடனடியாக காரின் ஸ்டியரிங்கை திரும்பி பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான். அதன் பின்பு அக்கம் பக்கத்தினர் இதை கவனித்து சிவக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக சிவக்குமார் சிவக்குமார் இறந்துவிட்டார். தன் தந்தை வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்து வாகனத்தை விபத்தில் சிக்கவிடாமல் சாதூர்யமாக செயல்பட்ட சிறுவனை பலர் பாராட்டினர்.

அடுத்த செய்தி