ஆப்நகரம்

மண்டபத்தில் முன்னாள் காதலனை பார்த்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மண்டபத்தில் தன் முன்னாள் காதலனைப் பார்த்த மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்தி சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 2 Mar 2020, 10:31 am
தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் ஏதோ இது சீரியலில்வந்த காட்சி என நினைத்து விடாதீர்கள். இது உண்மையிலேயே நடந்த சம்பவம். தெலங்கானா மாநிலம் வனப்பார்ட்டி என்ற மாவட்டத்தில் உள்ள சார்லபாலே என்ற கிராமத்தில் சமீபத்தில ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Samayam Tamil Telangana Marriage


திருமணத்திற்கு விருந்தினர்கள் எல்லாம் வந்துவிட்டனர். திருமணத்திற்கான சடங்குகளும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் மாப்பிள்ளை மணப்பெண்ணிற்குத் தாலி கட்ட போகிறார் என்ற நிலைமையில் மணப்பெண் திடீரென அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என சினிமா பாணியில் கூறினார்.

இதற்கான காரணத்தைக் கேட்டபோது தான் தனது முன்னாள் காதலனைப் பார்த்த பின்பு மனம் மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். அதாவது அந்த திருமண மண்டபத்திற்கு மணமகளின் முன்னாள் காதலன் வந்துள்ளான். காதலனைப் பார்த்ததும் அவனை விட்டு விட்டு வேறு ஆளைத் திருமணம் செய்ய அவருக்கும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அப்படிக் கூறியுள்ளார்.

Also Read : " பிகினி கில்லர் " உலகையே உலுக்கிவிட்டு இன்று சிறையில் கம்பி எண்ணும் சீரியல் கில்லரின் வரலாறு

அதைக்கேட்டதும் அந்த காதலன் உயிர் தப்பித்தால் சரி என அந்த மன்பதை விட்டு பின்னங்கால் பிடதியில் அடிக்க தெறித்து ஓடியுள்ளான். மணமகளை அவரது குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லை இறுதியில் திருமணம் நடக்காமலேயே போய் விட்டது.

அடுத்த செய்தி