ஆப்நகரம்

பிரிட்டனில் இந்தியாவின் மானத்தை வாங்கிய குஜராத்திகள்; பான் எச்சில் துப்புவதால் வந்த வினை..!

இந்தியாவை பொறுத்தவரை வெளிநாட்டு காரர்கள் இந்தியாவை சுகாதாரமற்ற நாடாக கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய மக்கள் பொது இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க உதவுவதில்லை. முக்கியமாக வட இந்தியாவில் பான் சாப்பிடும் பழக்கம் உள்ள பலர் தங்கள் எச்சிலை ரோட்டில் துப்புகின்றனர். அதன் கரை போகாமல் பான் துப்பும் இடமே சுகாதாரமற்ற இடமாக காட்சியளிக்கும்.

Samayam Tamil 15 Apr 2019, 2:31 pm
இந்தியாவை பொறுத்தவரை வெளிநாட்டுகாரர்கள் இந்தியாவை சுகாதாரமற்ற நாடாக கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய மக்கள் பொது இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க உதவுவதில்லை. முக்கியமாக வட இந்தியாவில் பான் சாப்பிடும் பழக்கம் உள்ள பலர் தங்கள் எச்சிலை ரோட்டில் துப்புகின்றனர். அதன் கரை போகாமல் பான் துப்பும் இடமே சுகாதாரமற்ற இடமாக காட்சியளிக்கும்.
Samayam Tamil ரோட்டில் பான் எச்சிலை துப்பாதீர்


சரி இந்தியாவில் தான் இப்படி என்றால் பிரட்டனில் குஜராத் மக்கள் அதிகமாக வாழும் பகுதியிலும் இந்த பிரச்சனை நீடித்து வந்துள்ளது. இந்திய அரசு பான் துப்புவதை பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் பல வெளிநாடுகளில் இது பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அந்நாட்டு அரசு இந்தியர் அதிகம் வாழும் பெல்கிரேவ் ரோடு, மெல்டன்ரோடு ஆகிய பகுதிகளில் குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.
Read More: தேர்தல் உற்சாகத்தில் "நாகினி டான்ஸ்" ஆடிய அமைச்சர்...!

அதில் "பான்களை ரோட்டில் துப்புவது சுகாதரமற்றதாகும் மேலும் அது சமூக விரோத செயல்களாகும் அவ்வாறு செய்பவர்களுக்கு 150 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ13 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது..
Read More: இறந்து 25 ஆண்டுகளுக்கு பின் உடலுக்கு இறுதி சடங்கு...! இலங்கை தமிழருக்கு நடந்த சோகம்

இந்தியர்கள் பல இடங்களில் பெருமைப்படும் விதமாக பல விஷயங்களை செய்தாலும், இது போன்ற விஷயங்கள் வெளிநாட்டினருக்கு இந்தியர்கள் சுகாதாரமற்றவர்கள் என்ற கருத்தை மேலும் காலூன்ற செய்கிறது.

அடுத்த செய்தி