ஆப்நகரம்

102 நாள் ஓட்டலில் தங்கிவிட்டு ரூ12 லட்சத்தை "ஏப்பம்" விட்டு சென்ற தொழிலதிபர்

ஐதிராபாத்தில் உள்ள ஸ்டார் ஓட்டலில் 102 நாட்கள் தங்கிய தொழிலபதிபர் ஒருவர் பல லட்ச ரூபாயை தராமல் ஏமாற்றி சென்ற சம்பவம் தற்போது செய்தியாகியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2019, 12:09 pm
ஐதிராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தாஜ் பஞ்சாரா என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் கடந்த 102 நாட்களாகத் தங்கியுள்ளார். இவர் தங்கியதற்காக அந்த ஓட்டல் நிர்வாக அவருக்கு ரூ 25.96 லட்சம் வாடகை பில்லை கொடுத்துள்ளது. அதற்காக அவர் முதலிலேயே ரூ13.62 லட்சத்தை முன் பணமாக வழங்கியிருந்தார்.
Samayam Tamil businessman in hyderabad stayed in taj banjara flees without paying 12 lakhs bill
102 நாள் ஓட்டலில் தங்கிவிட்டு ரூ12 லட்சத்தை "ஏப்பம்" விட்டு சென்ற தொழிலதிபர்


மீதம் உள்ள பணத்தைக் கிளம்பும் போது சொட்டில் செய்வதாகச் சொல்லியதால் அவர்கள் அந்த பணத்தைக் கேட்கவில்லை அவரை தொடர்ந்து அந்த ஓட்டலிலேயே தங்க அனுமதித்தனர்.

Read More: Bigg Boss வீட்டை பற்ற வைக்கும் வனிதா...! பதனி பதனி மொமெண்ட் மீம்கள்...!

இந்நிலையில் அவர் கேட்ட நாட்கள் முடிவடைந்த பின்பு ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ஓட்டலிலிருந்து தப்பி சென்றுவிட்டார்.

அவர் மறந்து சென்றிருக்கலாம் என முதலில் கருதிய ஓட்டல் நிர்வாகத்தினர் அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். அப்பொழுது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

Read More : Modi -யை கீழே தள்ளி முதலிடத்தை பிடித்தார் சன்னிலியோன்...! எதில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது?

அதன் பின்னர் தான் ஓட்டல் நிர்வாகத்திற்கு அவர் ஓட்டல் நிர்வாகத்தினரை ஏமாற்றிவிட்டார். என்பது தெரியவந்தது. இது குறித்து அந்த ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி