ஆப்நகரம்

நோயாளியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட டாக்டர்; தப்பு நோயாளி மீது தானாம்...!

கனடாவில் டாக்டர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட விவகாரம் தற்போது புயலை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 30 Jul 2019, 6:40 pm
கனடா நாட்டில் டொராண்டோ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் தீபா சுந்திரலிங்கம் இவர் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு இவரிம் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற வந்தார்.
Samayam Tamil நோயாளியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட டாக்டர்


அப்பொழுது அவருடன் தீபாவிற்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாட்கள் செல்ல செல்ல மேலும் நெருக்கமாகியது. இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து வெளியில் சுற்ற ஆரம்பித்தனர்.

கடந்த 2015 ஜனவரி முதல் 2016 மார்ச் வரை தீபா அந்த நோயாளிக்கு 23 முறை சிகிச்சை வழங்கியுள்ளார். அப்பொழுதே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்துள்ளது.
Read more: Einstein, Stephen Hawking -ஐ விட புத்திசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் சிறுமி...!

இந்நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளின் பட்டியலில் இருந்து தீபா குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை நீக்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நோயாளி தான் சிகிச்சை பெற வரும்போது தன்னை தீபா பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாகவும், தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாகவும் சிபிஎஸ்ஓ என்ற அமைப்பில் புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த அமைப்பு தீபாவை அழைத்து விளக்கம் கேட்டபோது அதற்கு அவர் மெளனமாகவே இருந்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு தீபாவின் மருத்துவர் உரிமையை பறித்ததோடு அவருக்கு அபராதமும் விதித்தது.
Read More: ரூ60 ஆயிரத்திற்கு விற்பனையாகும் "ஜில் ஜில்" பாப்கார்ன்; நீங்கள் சுவைக்க விரும்புகிறீர்களா?

இந்த சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் தான். தற்போது கிட்டத்தட்ட 6 மாதமாகியுள்ள நிலையில் தீபா தனது தரப்பு நியாயங்களை முன் வைக்க நீதிமன்றத்தை அனுகினார்.

அங்கு அவர் "தன்னால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நோயாளி தான் என்னை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்தி அவரது தேவைகளுக்காக என்னை பயபடுத்திக்கொண்டார்.
Read More: பகலில் பிச்சைக்காரன், இரவில் "ஜல்சா மன்னன்" ; நெல்லையை கலக்கிய "கசமுசா" சம்பவம்

ஆபாச போட்டோக்களை அனுப்ப சொல்லி என்னை மிரட்டினார். அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளவிட்டால் நான் அவருக்கு அனுப்பிய எஸ்எம்ஸ்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டினார். மேலும் என் மீது குற்றச்சாட்டு எழுந்த போது எனக்கு அவமானமாக இருந்ததால் நான் கூனி குறுகி நின்றுவிட்டேன்" என கூறினார்.

தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளியிடமே டாக்டர் உடலுறவு வைத்துக்கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

அடுத்த செய்தி