தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொலைந்து போன தனது பூனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ30 ஆயிரம் பரிசை அறிவித்துள்ளார். இது குறித்து முழு தகவல்களை கீழே காணலாம் தெலுங்கானா மாநிலம் ஐதிராபாத்தை சேர்ந்த பெண் செரினா நாட்டோ, இவர் ஜிஞ்சர் என்ற பூனையை வளர்த்து வந்தார். இதற்கு 8 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையல் கடந்த ஜூன் மாதம் இவர் தனது பூனைக்கு குடும்பகட்டுப்பாடு சிகிச்சை செய்ய அப்பகுதியில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அந்த பூனைக்கு குடும்பகட்டுப்பாட்டு ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்ரேஷன் நடந்த மறுநாள் ஆப்ரேஷன் செய்த இடத்தில் அந்த பூனைக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பூனையை அவர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அனுமதித்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி இந்த பூனை காணாமல் போய்விட்டாதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் செரினாவிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து செரினா பல இடங்களில் தேடினார்.தன் பூனை தொலைத்த மருத்துவமனை நிர்வாகம் மீது செரினா போலீசில் புகார் அளித்தார். பல இடங்களிலில் தேடியும் அந்த ஜிஞ்சர் பூனை கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் சமீபத்தில் அப்பகுதியில் ஒரு மீடியா சந்திப்பை நிகழ்த்தினார். அந்த சந்திப்பில் அவர் நடந்த சம்பவங்களை கூறி தனது ஜிஞ்சர் பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ30 ஆயிரம் பரிசு எனவும் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
இந்நிலையில் ஆப்ரேஷன் நடந்த மறுநாள் ஆப்ரேஷன் செய்த இடத்தில் அந்த பூனைக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பூனையை அவர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அனுமதித்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி இந்த பூனை காணாமல் போய்விட்டாதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் செரினாவிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து செரினா பல இடங்களில் தேடினார்.தன் பூனை தொலைத்த மருத்துவமனை நிர்வாகம் மீது செரினா போலீசில் புகார் அளித்தார். பல இடங்களிலில் தேடியும் அந்த ஜிஞ்சர் பூனை கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் சமீபத்தில் அப்பகுதியில் ஒரு மீடியா சந்திப்பை நிகழ்த்தினார். அந்த சந்திப்பில் அவர் நடந்த சம்பவங்களை கூறி தனது ஜிஞ்சர் பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ30 ஆயிரம் பரிசு எனவும் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்