ஆப்நகரம்

9 வயது சிறுமிக்கு காதிற்கு பதிலாக தொண்டையில் நடந்த ஆப்ரேஷன்

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு காதிற்கு பதிலாக தொண்டையில் ஆப்ரேஷன் நடந்துள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

Samayam Tamil 22 Oct 2019, 11:35 am
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 9 வயது சிறுமி ஒருவர் காதில் ஏற்பட்ட சின்ன கட்டி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil 9 வயது சிறுமிக்கு காதிற்கு பதிலாக தொண்டையில் நடந்த ஆப்ரேஷன்


இந்நிலையில் அவருக்கான அறுவை சிகிச்சை தேதி குறிக்கப்பட்டு நடந்தது. அறுவை சிகிச்சை முடித்துவிட்டு சிறுமி வெளிய வந்த பின்பு தான் சிறுமியின் பெற்றோர் சிறுமிக்குத் தொண்டையில் கட்டுப் போட்டுள்ளதைப் பார்த்தனர்.

Also Read : மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்த 40 வயது பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்தது...!

அதன் பின்பு ஆஸ்பத்திரியில் விசாரித்த போதுதான் அனைவருக்குமே காதில் சின்ன கட்டிக்காகச் சிகிச்சை செய்ய வந்த சிறுமிக்கு மாற்றி தொண்டையில் ஆப்ரேஷன் நடந்தது. தெரியவந்தது. பின்னர் கேட்கவா வேண்டும் மருத்துவமனையையே சிறுமியின் பெற்றோர் ஒரு வழி செய்துவிட்டு மருத்துவமனை நிர்வாகம் மீது போலீசில் புகார் அளித்தனர்.

Also Read : மழலை குரலில் " வெறித்தனம் " ...! க்யூடாக பாடும் குழந்தையின் வைரல் வீடியோ

அதன் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் நஷ்டஈடு எதிர்பார்ப்பதாகவும், அதை வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

அடுத்த செய்தி