ஆப்நகரம்

Free Biryani : வேட்டி கட்டி வந்தால் பிரியாணி இலவசம்... உடனே கிளம்புங்க...!

சென்னை தொப்பி வாப்பா என்ற பிரியாணிக்கடையில் வேட்டிக்கட்டி வந்தால் பிரியாணி இலவசம் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 6 Jan 2020, 1:02 pm
கடந்த 2015ம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் நிறுவன செயல் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாம் ஜனவரி 6ம் தேதி இளைஞர்கள் வேட்டி தினமாகக் கொண்டாடவேண்டும். கைத்தறி மற்றும் நெசவு தொழிலைக் காப்பாற்று விதமாக இது பெரிய விழிப்புணர்வை ஏற்படும். எனக் கூறியிருந்தார்.
Samayam Tamil Thoppi vappa biryani


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த வேட்டி தினத்தை வைத்து சென்னையில் உள்ள ஒரு பிரியாணிக்கடை ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read : இந்திய கப்பலை தாக்க வந்த நீர்முழ்கியை ஜலசமாதியாக்கிய இந்திய கடற்படை... அடுத்து நடந்தது?

அதன் படி சென்னையில் உள்ள தொப்பி வாப்பா என்ற பிரியாணிக்கிடையில் வேட்டி தினமான ஜனவரி 6ம் தேதி மதியம் 12 மணிக்கு வேட்டிக்கட்டி வரும் முதல் 50 நபர்களுக்குப் பிரியாணி இலவசம் என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. மேலும் கைத்தறி நெசவாளர்க்கு உதவும் வகையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினார். ஒரு கைத்தறி வேட்டி துண்டு இலவசம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.


Also Read : ஸ்பூனை வைத்து குழி தோண்டி ஸ்டாராவில் மிதந்து சிறையிலிருந்து தப்பிய கைதிகள்... அட சினிமா கதையில்லைங்க உண்மை சம்பவம் இது...

இந்த நிறுவனம் ஏற்கனவே இது போன்ற பல வித்தியாசமான ஆஃபர்களை இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. காதலர் தினத்தன்று முரட்டு சிங்கிள்களுக்கு இலவசமான பிரியாணி, சென்னை தண்ணீர் பஞ்சத்தின் போது பிரியாணிக்குத் தண்ணீர் இலவசம் போன்ற வித்தியாசமாக ஆஃபர்களை அறிவித்துப் பிரபலமாகியிருந்தது. தற்போது வேட்டி தினத்திற்கு இப்படி ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி