ஆப்நகரம்

கடைசியில் மண்டை மீது இருந்த கொண்டையை மறந்து போன திருடன்...!

சென்னை சிட்லபாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திருட வந்த திருடன் திருட்டில் ஈடுபடும்போது தான் அந்த வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 9 Oct 2019, 12:48 pm
சென்னை சிட்லபாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்ற நிலையில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரது வீட்டை கொள்ளயடியக்க வந்துள்ளார்.
Samayam Tamil கடைசியில் மண்டை மீது இருந்த கொண்டையை மறந்து போன திருடன்


ஆனால் வீட்டின் வாசலில் ஸ்ரீதர் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராவை பொருத்தியிருந்தார். முதலில் இதைக் கவனிக்காத திருடன் வீட்டின் முகப்பு இருப்பு கேட்டை லாவகமாகத் திறந்தார். பின்னர் உள் கதவைத் திறப்பதற்காக அவர் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்தார்.

Also Read : திருச்சியில் CCTVயில் சிக்காமல் இருக்க தலையில் குப்பை தொட்டியுடன் திருட்டில் ஈடுபட்ட கும்பல் - எவ்வளவு திருடினார்கள் தெரியுமா?

அவர் எடுத்து வரும் போது தான் அவர் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பகுதியை சிசிடிவி கேமரா பதிவு செய்து வருகிறது என்பதை உணர்ந்தார். இதைத் தலையில் அடித்துக்கொண்டு அவர் முதலில் திறந்த கதவை மூடிவிட்டு திருட்டில் ஈடுபடாமல் தப்பிச் சென்றார்.

Also Read : பழைய காரை வாங்குவதற்காக குழந்தையை விற்ற தாய்...! - எப்படி சிக்கினார்?

ஸ்ரீதர் வீட்டிற்கு வந்தபோது வெளியிலிருந்த இரும்பு கதவுத் திறந்து குடைந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீட்டிற்குள் எந்த பொருளும் காணாமல் போகவில்லை. எப்படி அப்படி அந்த இரும்பு கதவு திறந்திருக்கும் என்பதை அறிய சிசிடிவி கேமரா காட்சிகளைப் போட்டு பார்த்தபோது தான் அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே புரிந்தது. இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி