ஆப்நகரம்

வாட்ஸ் அப்பில் புடவை விற்றே மாதம் ரூ25 லட்சம் சம்பாதிக்கும் சண்முகப்பிரியா...!

சென்னையை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண் வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை செய்தே மாதம் ரூ 25 லட்சம் சம்பாதிக்கிறார். பெண்கள் முன்னேற்றத்தின் மிக முக்கிய வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 8 Oct 2019, 1:15 pm
சென்னையைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா, முதுகலை பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ 75 ஆயிரம் சம்பளத்தில் மனித வள மேலாளராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil சண்முகப்பிரியா


இந்நிலையில் அவரது கணவர் டில்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக சண்முகப்பிரியா குழந்தையை அருகில் இருந்தே கவனிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதனால் அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். பணியை விட்டதால் அவருக்கு வருமானம் பாதித்தது. மேலும் வீட்டில் சும்மா இருக்க அவருக்கு போர் அடித்ததால் ஏதாவது வீட்டிலிருந்தே செய்ய வேண்டும் என எண்ணினார்.

Also Read : தன் எஜமானர் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்கி வரும் நாய்...! ஊர் மக்கள் ஆச்சரியம்

அவருக்கு புடவைகள் மீது அதிக ஆர்வம் இருந்ததால் புடவைகளை வாங்கி தனக்குத் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து புடவைகளை வாங்கினார். அந்த புடவைகளைப் புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி புடவை குறித்து விளக்கம் அளித்தார்.

அந்த புடவையைப் பிடித்தவர் அவரிடம் புடவையை வாங்கத் துவங்கினர். முதலில் இந்த பணியைச் சற்று சிரமத்துடன் தான் பார்த்து வந்தார். ஆனால் இவரிடம் புடவை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

Also Read : மாணவனை காதலித்து 3 குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியை...! இப்பொழுது இருவரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

வாட்ஸ் அப்பில் புடவையைப் பார்த்துவிட்டு யூபிஐ மூலம் அதற்கான பணத்தை அனுப்பினால் அந்த புடவையை அவர் கொரியர் மூலம் அவர்களுக்கு அனுப்பினார்.

தற்போது இந்த வியாபாரம் பயங்கரமாகச் சூடுபிடித்துள்ளது. தற்போது ஷண்முகப்பிரியா தனக்கு மட்டுமல்லாமல் இதே போலப் புடவைகளை வாட்ஸ் ஆப்பில் விற்பனை செய்ய விரும்பும் பெண்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தொழிலைப் பெரிதாகச் செய்து வருகிறார்.

Also Read : இரட்டை தேங்காய் காய்க்கும் 125 ஆண்டு பழமையான அதிசய மரம்...!

ரூ75 ஆயிரம் பணியிலிருந்து விலகியதற்காகக் கவலைப்பட்டு இந்த தொழிலைத் துவங்கிய சண்முகப்பிரியாவிற்கு தற்போது மாத வருமானம் எவ்வளவு தெரியுமா ரூ 25 லட்சம், ஆம் கிட்டத்தட்ட ஒரு துணிக்கடை சம்பாதிக்கும் வருமானத்தை வாட்ஸ் ஆப்பில் பிஸ்னஸ் செய்து இவர் சம்பாதித்து வருகிறார். இவர் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பெண்களுக்கு இவர் நேரடியாக மறைமுகமாகவும் உதவி வருகிறார். பெண்கள் வேகமாக முன்னேறி வரும் இந்த காலத்தில் சண்முகப்பிரியாவின் வித்தியாசமான இந்த முயற்சி பலரும் பாராட்டும் விதமாக இருக்கிறது.

அடுத்த செய்தி