ஆப்நகரம்

சகதியில் சிக்கியவருக்கு உதவி செய்த குரங்கு... வைரலாகும் புகைப்படம்

இந்தோனேசியாவில் சகதியில் சிக்கியவருக்கு ஒரு மனிதக் குரங்கு உதவிக்கரம் நீட்டிய புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

Samayam Tamil 8 Feb 2020, 5:52 pm
இந்தோனேசியாவில் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனிதக்குரங்கு வகைகள் சில இருக்கிறது. அந்த குரங்களைப் பாதுகாக்க ஒரு தனியார் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அந்த குரங்கள் வாழும் காட்டிற்குள் சென்று அங்குள்ள பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் ஒரு சகதியில் சிக்கிக்கொண்டார்.
Samayam Tamil monkey help


Also Read : இந்த பெண் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் மாயமாய் மறைந்துவிட்டார்... 16 ஆண்டுகளாக போலீஸ் தேடியும் கிடைக்காத மர்மம்...

அப்பொழுது அங்கிருந்த மனிதக் குரங்கு ஒன்று அவருக்கு கை கொடுத்து சகதியிலிருந்து எழுந்து வர உதவியது. இதை அங்கிருந்த மற்றொரு ஊழியர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி