ஆப்நகரம்

பூனையை காப்பாற்ற பேரன் உயிரை பணயம் வைத்த பாட்டி - வைரலாகும் வீடியோ

சீனாவில் தன் வளர்த்த பூனையை காப்பாற்ற பாட்டி ஒருவர் பேரன் உயிரையே பணயம் வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 5:30 pm
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பென்கான் என்ற பகுதியை சேர்ந்தவர் டாங். வயதான பெண்மணியான இவர் வீட்டின் தன் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக பூனையை வளர்த்து வருகின்றனர்.
Samayam Tamil china paati peran


இந்த பூனை சமீபத்தில் வீட்டு பால்கனியிலிருந்து கீழ்தளத்தில் உள்ள பால்கனியில் தவறி விழுந்துவிட்டது. வீட்டில் பேரன் ஹூஹூவும் டாங்கும் மற்றும் இருந்த நிலையில் டாங் அந்த பூனையை காப்பாற்ற தன் பேரன் ஹூஹூவின் இடுப்பில் கயிற்றை கட்டி இறக்க முடிவு செய்தார்.

அவ்வாறு பாட்டி பேரன் வயிற்றில் கயிற்றை கட்டிய இறக்கியதை கீழ் தளத்திலிருந்து பார்த்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதை பொருட்படுத்தால் டாங் தனது பேரனை கியற்றை கட்டி கீழே அனுப்பி பூனையை மீட்டார். நல்லவிதமாக இந்த செயலில் பூனைக்கும், பேரனுக்கும் எதுவும் ஆகவில்லை.

Also Read : "எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்

இந்த சம்பவத்தை கீழிருந்து கூச்சலிட்ட சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி