ஆப்நகரம்

கொரோனா வைரஸ் கொண்டு வந்த "தெய்வத்திருமகள்" பாசம்....- வைரலாகும் வீடியோ

சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலியால் ஒரு தாய் மகளிடையேயான பாசம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 6 Feb 2020, 2:47 pm
சீனாவில் இன்று கொரோனா வைரஸ் பரவிக் கிட்டத்தட்ட அந்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி விட்டது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்த நாட்டில் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அறிகுறி உள்ளவர்களை அந்நாட்டு அரசு தனிமைப் படுத்தியுள்ளது.
Samayam Tamil கொரோனா வைரஸ் கொண்டு வந்த பாசம்.


இந்நிலையில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துமவனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான சிகிச்சை நடந்து வருகிறது. இங்கு பணியாற்றி வரும் யாரும் கொரோனா பரவுதல் கட்டுக்குள் வரும் வரை வீட்டிற்குச் செல்ல அனுமதியில்லை.

இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் செவிலியர் லியு ஹையனை காண அவரது 9 வயது மகள் செங் ஷிவென் என்பவர் வந்தார். இவர்கள் இருவரும் தூரத்தில் நின்று பார்க்கவே அனுமதிக்கப்பட்டது. அப்பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் காற்றிலேயே கட்டித்தழுவிக்கொண்டனர். மேலும் மகள் தாய்க்காக வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வந்திருந்தார். அதை அவர் ஒரு இடத்தில் வைத்துச் செல்ல தாய் லியு அதைப் பின்னர் வந்து எடுத்துச் செல்கிறார்.


Also Read : நீருக்கடியில் தேனிலவு கொண்டாடிய தம்பதி.... மனைவி மர்ம மரணம்... இறுதியாக வெளியான புகைப்படத்தில் சிக்கியது முக்கிய ஆதாரம்...!

இந்த காட்சி வீடியோவாக பதிவாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த காட்சியைப் பலர் தங்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.

அடுத்த செய்தி