பொதுவாகத் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ சபைகளில் கிறிஸ்தவ மதம் குறித்த போதனைகளும், ஆராதனைகளும், நடக்கும், இதில் குறிப்பிட்ட நாட்களில் அந்த சபைகளைச் சேர்ந்தவர்கள் சென்று அதில் கலந்து கொள்வார்கள்.
அங்குக் கிறிஸ்தவ மதம் போதித்துள்ள நல்ல விஷயங்கள், மனிதனின் ஒழுக்கம், கடவுளை எப்படித் தொழ வேண்டும், மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேணடும், சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் உள்ளிட்ட பல நற்பண்புகள் போதிக்கப்படும்.
இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பாஸ்கர் அகஸ்தியன் என்பவர் பேசியது வைரலாக பரவி வருகிறது. அவர் வழக்கமான பாதிரியார்கள்/பாஸ்டர்கள் போல இல்லாமல் மக்களில் ஒருவனாக இருந்து கிறிஸ்தவ மதத்தில் அந்த மதம் குறித்து அறியாமையில் சிலர் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யும் வகையில் பேசியுள்ளார். இதை அங்கிருந்தவர்களும் ரசித்துள்ளனர்.
பொதுவாகக் கிறிஸ்தவ சபைகளில் மற்ற சபைகளைச் சாடும் வழக்கம் இருந்தாலும் இது சற்று வித்தியாசமாக ஸ்டாண்ட் அப் காமெடியன் பேசுவது போலப் பேசினார். இந்த வீடியோ மதங்களைக் கடந்து அத்தனைப்பேரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ எப்பொழுது எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை.
இந்த விடியோ என்னதான் சிரிக்கும்படி இருந்தாலும் இதிலிருந்து நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் என்னதான் நம் சரியாக இருந்தாலும் நம்மை நாமே விமர்சனம் செய்து கொண்டு நம் தப்புகளைச் சரி செய்யும் பழக்கம் ஒவ்வொரு மனிதனிற்கும் தேவை அப்படியான மனிதன் மட்டுமே தன் வாழ்வில் சந்தோஷத்தையும் முன்னேற்றத்தையும் சந்திப்பான்.
அங்குக் கிறிஸ்தவ மதம் போதித்துள்ள நல்ல விஷயங்கள், மனிதனின் ஒழுக்கம், கடவுளை எப்படித் தொழ வேண்டும், மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேணடும், சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் உள்ளிட்ட பல நற்பண்புகள் போதிக்கப்படும்.
இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பாஸ்கர் அகஸ்தியன் என்பவர் பேசியது வைரலாக பரவி வருகிறது. அவர் வழக்கமான பாதிரியார்கள்/பாஸ்டர்கள் போல இல்லாமல் மக்களில் ஒருவனாக இருந்து கிறிஸ்தவ மதத்தில் அந்த மதம் குறித்து அறியாமையில் சிலர் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யும் வகையில் பேசியுள்ளார். இதை அங்கிருந்தவர்களும் ரசித்துள்ளனர்.
பொதுவாகக் கிறிஸ்தவ சபைகளில் மற்ற சபைகளைச் சாடும் வழக்கம் இருந்தாலும் இது சற்று வித்தியாசமாக ஸ்டாண்ட் அப் காமெடியன் பேசுவது போலப் பேசினார். இந்த வீடியோ மதங்களைக் கடந்து அத்தனைப்பேரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ எப்பொழுது எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை.
இந்த விடியோ என்னதான் சிரிக்கும்படி இருந்தாலும் இதிலிருந்து நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் என்னதான் நம் சரியாக இருந்தாலும் நம்மை நாமே விமர்சனம் செய்து கொண்டு நம் தப்புகளைச் சரி செய்யும் பழக்கம் ஒவ்வொரு மனிதனிற்கும் தேவை அப்படியான மனிதன் மட்டுமே தன் வாழ்வில் சந்தோஷத்தையும் முன்னேற்றத்தையும் சந்திப்பான்.