ஆப்நகரம்

ஈஷா ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் - பாதிரியார் கைது

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோசி சிலை மிகவும் பிரபலமானது. அங்கு வந்து கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 May 2019, 11:26 am
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோசி சிலை மிகவும் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
Samayam Tamil ஈஷா ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ மதப்பிரச்சாரம்


இந்நிலையில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெபசிங் என்ற கிறிஸ்தவ பாதிரியார் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்து ஆதியோகியின் சிலை முன்பு கூடியிருந்த மக்களிடையே யோகாவோ, யோகியோ, பாம்போ, சிலையோ ஒருபோதும் மனிதர்களை ரட்சிக்காது. இயேசுதான் உங்களுக்காக ரத்தம் சிந்தியிருக்கிறார் என மதப்பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் அந்த பாதிரியாைரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி