ஆப்நகரம்

இளைஞர் காதுக்குள் கூடுகட்டி குட்டிப்போட்ட கரப்பான் பூச்சி..!

காது வலியால் துடித்த இளைஞருக்குக் காதுக்குள் கரப்பான் பூச்சி கூடுகட்டி குட்டி போட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 8 Nov 2019, 2:25 pm
சீனாவில் உள்ள குவாண்டங்கை அடுத்த ஹூயாங் பகுதியைச் சேர்ந்தவர் லிவ். இவருக்குக் கடந்த சில நாட்களுக்குக் காதில் ஏதோ ஊருவது போல உணர்வு ஏற்பட்டுள்ளது. இது சிறிது நேரத்தில் கடுமையான வழியாக மாறியது. இதையடுத்து அவர் அவர் வீட்டின் அருகே உள்ள காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றார்.
Samayam Tamil காது


Also : 101 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் வெளியே வந்தது

அங்கு அவரை டாக்டர் பரிசோதித்த போது அவர் காதிற்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சி சுமார் 10க்கும் மேற்பட்ட குட்டிகளுடன் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் அதைச் சிறிய வகை கருவியைக் கொண்டு சின்ன கரப்பான் பூச்சியை அகற்றினார். ஆனால் பெரிய கரப்பான் பூச்சியை அகற்ற முடியவில்லை பின்னர் அதற்காகத் தனி மருந்து ஊற்றி அந்த கரப்பான் பூச்சி வெளியே எடுக்கப்பட்டது.

Also Read : அடேய்... நீங்க எல்லாம் எங்க இருந்துடாப்பா வர்றீங்க? - வைரலாகும் வீடியோ

இளைஞரின் காதில் கரப்பான் பூச்சி குட்டிகளுடன் கூடுகட்டி வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி