ஆப்நகரம்

கொரோனாவுக்கு பேனர் வைத்து மிரட்டல்...

கோவையில் கொரோனாவிற்கு எதிராக வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் சமூகவலைத்தங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 26 Mar 2020, 10:03 am
இன்று நாடு முழுவதும் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது மக்கள் எல்லாம் கொரோனாவை தடுக்க வீடுகளில் சுயதனிமைப்படுத்தியுள்ளனர். அரசும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil corona sticker


இந்நிலையில் கோவையில் உள்ள டிஆர்கே ஸ்டிக்கர் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தை அடைக்கும் முன்பு ஒரு பேனர் ஒன்றை அடித்து தங்கள் கடைமுன் தொங்க விட்டு சென்றுள்ளனர். அந்த பேனர் தான் தற்போது சமூகுவலைத்தளஙகளில் செம வைரல்.

அந்த பேனரில் அவர்கள் "எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை, கொரோனாவுக்கு எச்சரிக்கை, 23.3.2020 முதல் 31.03.2020க்குள் இப்பூவுலகை விட்டு வெளியே போய் விடு இல்லையெனில் 1.4025020 முதல் உன்னை இப்பூவுலகை விட்டே விரட்டி விடுவோம். உனக்கு பயந்து மூடவில்லை. எச்சரிக்கை விடுக்கிறோம் இப்படிக்கு டிஆர்கே ஸ்டிக்கர்ஸ் கோயம்புத்தூர்" என அச்சிட்டுள்ளனர்.


Also Read : பிரபல ஹாலிவுட் நடிகரின் கார் விபத்திற்கு பின்பு இப்படி ஒரு மர்மமா?
இந்த வாசகத்தை படித்தவுடனேயே எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிடும். இதை இந்த நிறுவனம் சிரியஸாக செய்ததாக அல்லது விளையாட்டிற்கு செய்ததா என்பது தெரியவில்லை. ஆனால் இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி