ஆப்நகரம்

நாடு முழுவதும் காண்டம் விற்பனை ஜரூர்...

நாடு முழுவதும் காண்டம் மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 28 Mar 2020, 12:05 pm
இந்தியா முழுவதும் 21 நாட்களுகு்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மற்றவேலைகளை எல்லாம் முடக்கிவிட்டு மக்கள் எல்லாம் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடைக்கின்றனர். அதே நேரத்தில் மக்களுக்கு ஆரோகியம் பற்றிய பயமும் தொற்றிக்கொண்டுள்ளது. மக்கள் சானிடைசர் மற்றும் மாஸ்கை அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் இந்த பொருட்களின் விற்பனை அதிகமாகிவிட்டது.
Samayam Tamil condom sales


Also Read : 30 ஆண்டுகள் தனிமைபடுத்தப்பட்ட பெண்...

இதே போல பல மெடிக்கல் மற்றும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு காண்டம் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் படி மத்திய டில்லியில் மெடிக்கல் நடத்தி வரும் ஒருவர் கூறும் போது "மக்கள் மத்தியில் கொரோனா பரவல் குறித்த பீதி இருப்பதால் முகத்தில் அணியும், மாஸ்க், மற்றும் சானிட்டைசர்கள் விற்பனை அதிகமாக இருந்தது. இந்திய அரசு மலேரியா மருந்தை கொரோனாவிற்கு பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியதுஅந்த மருந்தின் விற்பனையும் அதிகமானது. இதற்கிடையில் காண்டம் மற்றும் கருத்தடை மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. " என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி