ஆப்நகரம்

சும்மா இருந்த தம்பதிக்கு கிடைத்த ரூ86 லட்சம்...! ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு தற்போது கோர்ட்டில் நிற்கும் பரிதாபம்..

அமெரிக்காவில் ஒரு தம்பதியின் வங்கி கணக்கில் தெரியாமல் ரூ86 லட்சம் பணம் ஏறியதால் அவர்கள் அதை செலவு செய்தனர். தற்போது கையும் களவுமாக சிக்கி கோட்டில் போராடி வருகின்றனர்.

Samayam Tamil 14 Sep 2019, 11:31 am

அமெரிக்காவில் மான்டர்ஸ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் மற்றும் டிஃப்னி வில்லியம்ஸ். இவர்கள் திருமணம் செய்து சாதாரணமாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்கள் வருமானத்தைச் சேர்த்து வைக்கவும் செலவு செய்யவும் ஒரு வங்கியின் இருவரது பெயரிலும் ஒரு கணக்கை உருவாக்கி அதை மெயிண்டெயின் செய்து வருகின்றனர்.
Samayam Tamil சும்மா இருந்த தம்பதிக்கு கிடைத்த ரூ86 லட்சம்


இந்நிலையில் அந்த அக்கவுண்டில் தவறுதலாக 1.20 லட்சம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் (சுமார் 85.49 லட்சம்) பணம் வந்தது. வங்கியில் ஏற்பட்ட ஏதோ கோளாறு காரணமாக இந்த பணம் இவர்களது வங்கிக் கணக்கில் ஏறிவிட்டது.

சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடு ரோட்டில் பிரசவம் பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர்...!

இதை பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியாத இந்த தம்பதி அந்த பணத்தை எடுத்து தங்களது கனவுகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்ள விரும்பினர். அதன் படி அவர்கள் தங்களது கடன்களை எல்லாம் தீர்த்துவிட்டு தாங்கள் விருப்பப்பட்ட ஒரு எஸ்யூவி மற்றும் ஒரு ரேஸ் காரை வாங்கினர். இது மட்டுமல்லாது தங்கள் விடுமுறையை ஜாலியாக கழிப்பதற்காக ஒரு சிறிய வீட்டையும் வாங்கிவிட்டனர்.

மீதம் இருந்த பணத்தைப் பணம் தேவைப்படும் தங்கள் நண்பர்களுக்குக் கொடுத்தனர். இவர்கள் தங்கள் நண்பர்களுக்கு மட்டும் 15 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ10.86 லட்சத்தைக் கடனாகக் கொடுத்தனர்.

பல நாட்களாக இந்த பணம் தவறுதலாக அவர்கள் வங்கிக் கணக்கிற்குச் சென்றதை வங்கி நிர்வாகிகள் கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அதைக் கவனித்ததும் அந்த தம்பதியைத் தொடர்பு கொண்ட வங்கி அந்த பணத்தைத் திரும்பக் கட்ட சொல்லி அதற்குக் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

சென்னையில் 1.5 வயதில் காணாமல் போன மகன் 20 ஆண்டுகளுக்கு பின்பு திரும்ப கிடைத்த நெழ்ச்சி சம்பவம்...!

அவர்கள் அந்த பணத்தைக் கட்ட தவறியதால் வங்கி நிர்வாகம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தது. தற்போது அந்த தம்பதி மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட் இந்த இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி அடுத்த விசாரணையைத் தள்ளி வைத்தது.


ரூ 17.6 லட்சத்திற்கு ஏலத்திற்கு போன 21 கிலோ விநாயகர் லட்டு...!

தம்பதிகள் தங்கள் வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாக வந்த பணத்தைத் தாறுமாறாகச் செலவு செய்துவிட்டு அந்த பணத்தை மீண்டும் திருப்பக் கட்ட முடியாமல் கோர்ட்டில் வழக்கைச் சந்தித்து வரும் செய்தி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி