ஆப்நகரம்

அக்காவை திருமணம் செய்த தங்கை...! கோவிலில் நடந்த கொடூரம்...!

உ.பி மாநிலம் வாரணாசியில் அக்காவும் தங்கையும் திருமணம் செய்து கொண்ட கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Jul 2019, 6:35 pm
உ.பி மாநிலம் வாரணாசியை சேர்ந்த இரண்டு பெண்கள் அங்கிருந்த ஒரு கோவிலுக்கு தான் தாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய விரும்புவதாக அங்கிருந்த ஐயரிடம் சொல்லியுள்ளனர். இதை கேட்டு புரியாமல் குழம்பிய அவர் பெண்ணிற்குள் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமா என கேட்டார். அந்த பெண்கள் ஆம் என கூற அதிர்ந்து போன அந்த ஐயர் முடியாது என மறுத்துவிட்டார்.
Samayam Tamil lesbian marriage


அந்த பெண்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரிகளாவார்கள். இவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என வீட்டில் கேட்டுள்ளனர். வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்ய எண்ணி தான் இந்த கோவிலுக்கு வந்துள்ளனர்.

கோவிலில் ஐயர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் இருவரும் அங்கேயே அமர்ந்தவர் ஐயர் எவ்வளவு சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இந்த தகவல் அப்பகுதியில் பரவியது கோவில் முன்பு பெரும் கூட்டம் கூடியது. கோவிலில் எப்படி ஒரே பாலித்தை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செயது வைக்க முடியும் பிரச்னை செய்தனர். இதற்குள் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

வாரணாசியில் நடந்த முதல் ஒரே பாலின திருமணம் இது தான் என கூறப்படுகிறது. பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யத விவகாரம் தற்போது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி