ஆப்நகரம்

பக்கத்துல படுத்து குறட்டை விட்டு தூக்கத்தையா கெடுக்குற... இந்தா வச்சிக்க....!

குறட்டை விடும் தந்தையின் செயலை தடுக்க குழந்தை செய்த செயல் வீடியோ சமூகுவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 24 Jan 2020, 10:46 am
இரவு சாப்பாடு முடிந்தவுடன் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டோ, அரட்டை அடித்துவிட்டோ கண்ணைக் கட்டும் வேலையில் படுக்கச்சென்று தூங்கும்போது ஒரு சுகம் கிடைக்கும் பாருங்கள் அது வாழ்வில் மிகப்பெரிய வரம்.
Samayam Tamil Daddy Snore


ஆனால் நாம் தூங்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என யாருக்கும் தெரியாது. சிலர் தூங்கும் போது பலமாகக் குறட்டை விடுவார்கள். பயங்கர சத்தமாகக் குறட்டை விட்டாலும் அந்த குறட்டை சத்தம் அவர்கள் தூக்கத்தைக் கெடுக்காது.

மாறாக அருகில் யாரேனும் படுத்திருந்தால் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடும். குறட்டை விடுவது என்பது மிகவும் அருகில் உள்ளவர்களுக்குத் தூக்கத்தைக் கெடுக்கும் மிக முக்கியானமான விஷயம்.

Also Read : சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது ? மேஷம் முதல் மீனம் வரை இதோ மீம்ஸ்...

குறட்டை விடும் பழக்கம் இருப்பதால் சிலர் விவாகரத்தே வாங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தந்தை குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க அருகில் படுத்திருக்கும். சிறிய குழந்தை ஒன்று தந்தையின் குறட்டையை நிறுத்த செய்த காரியம் டிக்டாக்கில் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


இந்த வீடியோவில் அந்த குழந்தை தனது காலில் உள்ள சாக்ஸை கழட்டி தந்தையின் வாயில் வைத்து ஒரு அடியைப் போடுகிறது பாருங்கள். பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பலர் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி