ஆப்நகரம்

"ரொம்ப பசிக்குது நாலு நாளா சாப்பிடல" என 100க்கு போன் போட்ட இளைஞர்

"ரொம்ப பசிக்குது நாலு நாளா சாப்பிடல" என போலீசிற்கு போன் போட்டு இளைஞர்கள் கதறிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 28 Mar 2020, 11:18 am
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 21 நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தற்போது ஆதரவில்லலாமல் தெருவோரங்களில் வாழும் மக்களுக்கு உணவிற்காக பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil daily wages


டில்லியை சேர்ந்த முகம்மது, மற்றும் பிரசாந்த் ஆகியோர் ஒரு தனியார் நிறுவனத்தின் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் வேலை செய்யும் நிறுவனம் தற்காலிகமாக பணியை நிறுத்தியுள்ளதால் இவர்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து 4 நாட்களுக்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்துள்ளனர்.

ஆனால் கையில் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போன நிலையில் இவருக்கும் பசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பின்னர் வேறு வழியின்றி 100க்கு போன் செய்து தங்கள் நிலைமையை எடுத்து கூறி தங்களுக்கு பசிக்கிறது என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல் உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.


Also Read : 30 ஆண்டுகள் தனிமைபடுத்தப்பட்ட பெண்...

அவர்கள் நேரில் சென்று முகம்மது மற்றும் பிரசாந்தை சந்தித்து அவர்களுக்கு அரிசி பருப்பு போன்ற சாமான்களை வாங்கி கொடுத்தும், தற்போது சாப்பிட சாப்பாடும் கையில் ரூ1000 பணம் கொடுத்துவிட்டும் வந்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் கூறும் போது. கையில் பணம் இல்லாத போது திருட்டு போன்ற தவறுகளில் ஈடுபடாமல் போலீசாருக்கு போன் செய்தது பாராட்ட தக்கது என கூறினர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி