ஆப்நகரம்

அம்மாவிற்காக மாப்பிள்ளை தேடும் மகள் ; 50 வயது மாப்பிள்ளை தேவை..!

ட்வீட்டரில் தனது அம்மாவிற்கு 50 வயதில் மணமகன் வேண்டும் என பெண் ஒருவர் வெளியிட்ட ட்வீட் சமூகவலைத்தளங்களி்ல் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 2 Nov 2019, 3:36 pm
இந்தியாவில் கணவனை இழந்த மனைவிகள் எல்லாம் இறுதி வரை விதவையாகவே தன் வாழ்வைக் கழித்தது அந்த காலம் சிறு வயதில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் அளவிற்கு இந்திய மக்களின் மனம் பக்குவப்பட்டுவிட்டது.
Samayam Tamil அம்மாவிற்காக மாப்பிள்ளை தேடும் மகள்

Photo :AasthaVarma


அந்த பெண்ணின் மனநிலை மற்றும் வாழ்வில் அந்த பெண்ணின் கனவுகளை எல்லாம் கருதி இந்த சமூகம் அவர்களுக்கான மறுவாழ்வை பெற்று தருவதில் தயங்குவதில்லை. ஆனால் வயதான பின்பு ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து வாங்கிவிட்டு சென்றுவிட்டோலோ அந்த பெண்ணின் மறுமணம் குறித்து யாரும் யோசிப்பதே இல்லை. அந்த பெண்ணின் நிலை குறித்து வெறும் கவலை மட்டுமே கொள்கிறார்கள்.

Also Read : இணையத்தில் வைரலாகும் "குட்டி மைக்கேல் ஜாக்சன்" வீடியோ..! பார்த்தால் அசந்த போவீர்கள்...

இந்நிலையில் தனிமையில் இருக்கும் தனது அம்மாவிற்குத் திருமண வயதில் இருக்கும் ஒரு பெண் மாப்பிள்ளை தேடுகிறார் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?

அஸ்தா வர்மா என் ட்வீட்டர் கணக்கில் உள்ள ஒரு பெண் தான் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு நான் எனது அம்மாவிற்காக 50 வயதில் பார்க்க அழகான, வெஜிட்டரியன் மற்றும் குடிப் பழக்கமில்லாத நபரைத் திருமணத்திற்காகத் தேடுவதாக வெளியிட்டிருந்தார்.

இந்த ட்வீட் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. சுமார் 28 ஆயிரம் பேர் இந்த ட்வீட்டை லைக் செய்துவிட்டனர். பலர் இவரது முயற்சிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

Also Read : போலீஸ் ஸ்டேஷனிற்குள் கெத்தாக எண்டரி கொடுத்த "எஸ்.ஐ" அக்கா இப்ப கம்பி எண்ணுகிறார் ஏன் தெரியுமா?


Also Read : பைக் ஓட்டுகிறேன் என்கிற பெயரில் ஒரு கொலை முயற்சி..! - குபீர் சிரிப்பை கிளப்பும் வைரல் வீடியோ

மகளே தன் அம்மாவிற்கான வாழ்க்கைத் துணையைத் தேடும் விவகாரம் தற்போது வைரலான செய்தியாக மாறியுள்ளது.

அடுத்த செய்தி