ஆப்நகரம்

Election Results 2019: வாக்குப்பதிவு இயந்திரங்களை மோசடி செய்கிறதா பா.ஜ.,? வைரலாகும் வீடியோக்களால் பரபரப்பு

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எல்லாம் முடிந்துவிட்டன. நாளை வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. நாட்டில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க போகும் கட்சி எது என்பது நாளை முடிவாகும்.

Samayam Tamil 22 May 2019, 10:42 am
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எல்லாம் முடிந்துவிட்டன. நாளை வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. நாட்டில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க போகும் கட்சி எது என்பது நாளை முடிவாகும்.
Samayam Tamil வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி


இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரீரு நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிலர் எடுத்து செல்வது, ஒரு குடோனில் இருந்து எடுத்து செல்வது, போன்ற பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

ஆம்ஆத்மி உள்ளிட்ட பல அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சமூகவலைதள பக்கங்கள் கூட இதை பகிர்ந்து இந்த வீடியோ காட்சிகள் குறித்து விளக்கம் அளித்திருந்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் ஆணையம் பா.ஜ., உடன் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த தேர்தல் ஆணையம் இந்த வீடியோக்களுக்கான விளக்கமும் அளித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு நடக்கும் போது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படலாம். அதனால் வாக்குப்பதிவு பாதிப்படைவதை தடுக்க தேர்தல் ஆணையம் எப்பொழுது ஆங்காங்கே பேக்கப் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

வாக்குப்பதிவு நடந்து அதிகாரிகள் அந்த இயந்திரத்தை சீல் வைத்தவுடன் அது உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்படும்.

வாக்குப்பதிவிற்காக ரிசர்வில் இருக்கும் இயந்திரங்கள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அது பயன்படுத்தப்படவில்லை என்றால் அவர்கள் நேரடியாக வாக்குப்பதிவிற்கு பின்பு அதை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

வாக்குப்பதிவு நடக்காதவரை இயந்திரங்கள் எந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்கள் அதை அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்த வகையிலான வாகனங்களில் எடுத்து செல்ல அனுமதியுள்ளது.

மேலும் சில அதிகாரிகள் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதிலும் எடுத்து செல்லலாம். அவர்கள் எடுத்து செல்லும் இயந்திரங்கள் ஒருவேளை பயன்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அது பயன்படுத்தப்படுவதற்கு முன்பு வாக்குசாவடியில் அந்த இயந்திரத்தில் இதற்கு முன்னர் எந்த வாக்குகளும் பதிவாகவில்லை என அங்குள்ள பூத் ஏஜெண்ட்களிடம் உறுதி செய்த பின்பே வாக்குப்பதிவு நடைபெறும்.

அவ்வாறு வாக்குப்பதிவான இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் ஸ்டிராங் ரூமிற்கு வந்துவிடும். நடந்து முடிந்த தேர்தலில் அணைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஸ்டிராங் ரூமிற்கு வந்துவிட்டது. எந்த விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை. வெளியாகும் வீடியோக்கள் எல்லாம் போலியான அல்லது தவறான தகவல்களை கொண்டிருப்பவை என தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி