ஆப்நகரம்

3 பெண்களை மனைவியாக்கி யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பலே இளைஞர்; இறுதியில் நடந்த பயங்கரம்

தர்மபுரில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என 3 பெண்களை திருமணம் செய்த

Samayam Tamil 16 Jul 2019, 8:04 pm
தர்மபுரியை சேர்ந்தவர் ராஜா (30), இவர் தனியார் கார்பரேட் சலூனில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த மாமன் மகள் சந்தியாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil 3 பெண்களை மனைவியாக்கி யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பலே இளைஞர்


இந்நிலையில் இவர் திடீரென தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் தனியாக தேனிக்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு தனலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

தனக்கு திருமணமானதை கூறாமல் தனலட்சுமியுடன் பழகி வந்தார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் தனலட்சுமியும் ராஜாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்பு ராஜாவிற்கு மீண்டும் பணியிட மாறுதல் ஆனது அங்கு சென்றும் தனது வேலையை காட்டிய ராஜா 19 வயதான காவ்யா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்பொழுது புதுச்சேரிக்கு சென்ற ராஜா, காவ்யாவுடன் உல்லாசமாக இருக்க நினைத்து அவரை புதுச்சேரிக்கு அழைத்துள்ளார் ராஜா. ஆனால் அதற்கு காவ்யா மறுத்துவிட்டதால் மனமுடைந்த ராஜா அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாவின் உடலை கைபற்றி அவரது சொந்தக்காரர்களுக்கு தகவல் கொடுத்த போது தான் ராஜாவிற்கு 3 பேர் தான்தான் மனைவி என சொந்தம் கொண்டாடியது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் என்ன செய்வது என தெரியாமல் விழித்தனர்.

இறுதியாக முதல் மனைவி தான் சட்ட ரீதியிலான மனைவி என்பதால் அவரிடமே ராஜாவின் உடலை ஒப்படைத்தனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு மனைவியுடன் வாழ்வதே பெரும் சவாலாகி போய்விட்ட நிலையில் ஒருவர் 3 மனைவிகளை திருமணம் செய்து ஒருவருக்கு ஒருவர் தெரியாத அளவிற்கு வாழ்ந்து வந்துள்ளார். அவர் இறந்த பின்னர் தான் அவருக்கு 3 மனைவிகள் என்ற தகவலே வெளியே வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி