ஆப்நகரம்

வேறு ஜாதி "நாய்" உடன் காதல் ; ஆதரவில்லாமல் ரோட்டில் திரிந்த பரிதாபம்

கேரளாவில் தான் வளர்த்த நாய் ஒன்று வேறு ஜாதியுடன் உறவு கொண்டதால் அந்த நாயின் உரிமையாளர் நாயை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

Samayam Tamil 13 Jan 2020, 4:13 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சகாய் என்ற பகுதியில் பொமெரியன் வகை நாய் ஒன்று ஆதரவற்ற நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த சிலர் விலங்குள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் வந்து அந்த நாயை மீட்டார்.
Samayam Tamil dog love


அந்த நாயின் கழுத்தில் கடிதம் ஒன்று கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. ஷமீன் அந்த கடிதத்தை எடுத்து படித்தார். அந்த கடிதத்ததில் : "இந்த நாய் மிகவும் நல்ல பழக்கங்களை கொண்ட நாய், இது யாரையும் கடிக்காது. பால், முட்டை, பிஸ்கெட் அதிகம் சாப்பிடும். தேவையற்ற செயல்கள் எதுவும் செய்யாது. ஆனால் இது பக்கத்து வீட்டில் வளக்கப்படும் வேறு இனத்தை சேர்ந்த நாயுடன் உறவு வைத்துக்கொண்டதால் இந்த நாயை துரத்திவிட்டேன்" என எழுதப்பட்டிருந்தது.

Also Read : "எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்

நாய்கள் வெறும் 4 கால் பிராணிகள் அதற்குள்ளும் நாம் ஜாதிகளை கொண்டு வர வேண்டுமா? நாய்கள் தான் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் மற்ற நாய்களிடம் உறவு வைத்துக்கொள்ளும், இது குற்றமா? இந்த நாயை உரிமையாளர் துரத்திவிட்டார் என்பது கூட தெரியாமல் உரிமையாளர் வந்து அழைத்து செல்வார் என்ற ஆர்வலத்திலேயே நாய் இருந்ததாக ஷமீன் கூறினார்.

அடுத்த செய்தி