ஆப்நகரம்

High Speed Train Slow Down: போதையாட்டத்தில் புல்லட் ரயிலையே நிறுத்திய குடிமகன்..! அடுத்து நடந்தது தான் த்ரில்...!

ஜெர்மனில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் என்ற நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸிற்கு ஒரு புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.

Samayam Tamil 19 Mar 2019, 3:13 pm
ஜெர்மனில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் என்ற நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸிற்கு ஒரு புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
Samayam Tamil போதையாட்டத்தில் புல்லட் ரயிலையே நிறுத்திய குடிமகன்


இந்த ரயில் பயணத்தில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அதிக மதுபோதையில் இருந்தததாக கூறப்படுகிறது. இவர் திடீர் என எழுந்து ரயில் அதிக வேகத்தில் செல்வதாகவும், வேகத்தை குறைக்கும்படியும் கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் ரயில் இருந்த மற்றவர்கள் பதற்றமடைந்தனர். தொடர்ந்து ரயிலின் வேகம் குறையாததால் வேகமாக ரயிலின் ஓட்டுநர் இருக்கும் பக்கம்நோக்கி நகர்ந்தார். அங்கு பயணிகள் இருக்கும் பகுதிக்கும் ஓட்டுநர் இருக்கும் பகுதிக்கு இடையே ஒரு கண்ணாடி ஒன்று இருந்தது.
Read More: கையில பஸ்சுக்கு கூட காசு இல்லையா? 100க்கு கால் பண்ணா லிப்ட் கிடைக்கும்...!

அதை தட்டி ரயிலில் வேகத்தை குறையுங்கள் பயணிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் அவர்களை காப்பாற்ற வேண்டும் என கூச்சலிட்டார். ஆனால் ரயில் சரியாகதான் செல்கிறது என்று உறுதி செய்து கொண்ட ஓட்டுநர் அவரின் நிலை அறிந்து அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த குடிமகன், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க வைக்கப்பட்டிருந்த கருவியை எடுத்து ரயில் ஓட்டுநர் அருகே உள்ள கண்ணாடியை உடைக்க முற்பட்டார்.
Read More: இறந்து போன உரிமையாளரை தேடித்திரியும் பாசக்கார நாய்... மனதை உருக்கும் சம்பவம்...!

இதையடுத்து ரயில் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கிந்த போலீசார் இந்த குடிமகனை கைது செய்தனர். அதன் பின் ரயிலில் உடைந்த கண்ணாடி பகுதி சரி செய்யப்பட்டு ரயில் பாரீஸை நோக்கி பயணிக்க துவங்கியது.

அடுத்த செய்தி