ஆப்நகரம்

TDP: தேர்தல் வரை அரசு அலுவலகங்களில் இருந்து மின் விசிறி அகற்றம்; காரணம் தெரிந்தால் கோப்படுவீர்கள்..!

லோக்சபா தேர்தல் அறிவித்தாகி விட்டது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. தற்போது இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

Samayam Tamil 14 Mar 2019, 3:24 pm
லோக்சபா தேர்தல் அறிவித்தாகி விட்டது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. தற்போது இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
Samayam Tamil அரசு அலுவலகங்களில் இருந்து மின் விசிறி அகற்றம்


இந்நிலையில் ஆந்திரா மாநிலம் முதற்கட்ட வாக்குபதிவை சந்திக்கிறது. இதனால் அந்த மாநிலத்தில் தற்போது தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்க துவங்கி விட்டன.

ஆந்திரா மாநில முதல்வரான சந்திரபாபுநாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் சித்தூரில் உள்ள ராமகுப்பம் மண்டல் பகுதி தேர்தல் அதிகாரிகளிடம் தற்போது புதிய விதமாக மனு ஒன்றை அளித்துள்ளனர்.
Read More: வங்கி கணக்கில் ரூ 3.1 லட்சம் போட்ட மோடி? ம.பி பெண்ணிற்கு அடித்தது அதிஷ்டம்..!

அதன் படி ஒய்எஸ்ஆர் காங்., கட்சியின் சின்னம் மின் விசிறி சின்னமாகும். தேர்தல் நடத்தை விதிகளின் படி அரசு அலுவலகங்களில் கட்சி சின்னங்களை எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்த கூடாது. அதனால் அரசு அலுவலகங்களில் உள்ள மின் விசிறிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுவாக தேர்தல் நேரங்களில் தலைவர்களின் சிலைகள் எல்லாம் மூடப்படும். தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் படங்கள் கூட அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்படும். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி இப்படி ஒரு மனு அளித்திருப்பது பலரை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
Read More: இந்த தேர்தலில் ஓட்டு போட காத்திருக்கும் "பாகுபலி", "இட்லி" ,"ஆப்பிள்" : அதிர்ச்சியளிக்கும் தகவல்

இந்த மனுவை பெற்ற அந்த பகுதி தாசில்தார் ஜனார்தன் சேத்தி உடனடியாக அரசு அலுவலகங்களில் உள்ள மின் விசிறிகளை அகற்ற சொல்லி உத்தவரவிட்டார். மேலும் இவர் இந்த மனு குறித்து தேர்தல் உயர் அதிகாரிகளுக்கு தெரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Read More: குடிபோதையில் ஆடிய மாப்பிள்ளை; காண்டான மணப்பெண், அடுத்து நடந்தது தான் ஹைலைட்..!

பொதுவாக இந்தியாவில் இது கடுமையான வெயில் காலம், குறிப்பாக தேர்தல் நடைபெறும் காலம் வெயில் காலம் இந்த காலங்களில் மின் விசறி இல்லாமல் நிச்சயம் அரசு அலுவலர்கள் கடும் துயரத்திற்கு ஆளாவார்கள். இதனால் இந்த நடவடிக்கை தவறு என சில பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி