ஆப்நகரம்

குழந்தை பெற்று 30 நிமிடங்களிலேயே தேர்வெழுதிய "வொன்டர் உமன்"

எத்தியோப்பியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மேட்டு என்ற ஊரில் வசித்து வரும் 21 வயது பெண் அல்மான் டெரேஸ், இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அதே நேரத்தில் தனது படிப்பையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2019, 6:45 pm
எத்தியோப்பியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மேட்டு என்ற ஊரில் வசித்து வரும் 21 வயது பெண் அல்மான் டெரேஸ், இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அதே நேரத்தில் தனது படிப்பையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
Samayam Tamil குழந்தை பெற்று 30 நிமிடங்களிலேயே தேர்வெழுதிய வொன்டர் உமன்


அவரது படிப்பிற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இவருக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கும் என முதலில் டாக்டர்கள் சொன்னார்கள்.

எனினும் தனது தேர்விற்க்கும் குழந்தை பிறப்பிற்கும் இடையே ஒரு வார இடைவெளி இருந்ததால், குழந்தை பிறக்கும் முன்பு தேர்வை முடிக்க அல்மான் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ரம்ஜான் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் எப்படியாவது அவர் தனது தேர்வை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். தேர்வு நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் வரை அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. தேர்வு நடக்கும் நாளன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

தேர்வு நடக்கும் நேரத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்தும் தனது தேர்வில் கவனமாக இருந்த அல்மான் எப்படியாவது தேர்வை எழுத வேண்டும் என தனது கல்வி நிறுவன நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் அல்மான் மருத்துவமனையில் இருந்தே தேர்வு எழுத ஏற்பாடு செய்தனர்.

அதன் படி அவர் ஆங்கிலம், ஆம்ஹாரிக், மற்றும் கணக்கு ஆகிய தேர்வுகளை எழுதினார். இந்த செய்தி தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி