ஆப்நகரம்

Hungary: திருமணம் செய்தால் ரூ 25 லட்சம்..! 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சொகுசு கார் பரிசு...!

ஹங்கேரி நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதால் திருமணம் செய்பவருக்கு ரூ 25 லட்சம் வட்டியில்லா கடன், 3 குழந்தைகள் பிறந்தால் அந்த கடன் ரத்து மற்றும் அந்த குடும்பத்திற்கு ஒரு சொகுசு கார் என ஏராளமான திட்டங்களை ஹங்கேரி நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Feb 2019, 1:44 pm
ஹங்கேரி நாட்டில் கடந்த 1980ம் ஆண்டு முதல் அந்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. சராசரியாக அந்நாட்டில் ஆண்டிற்கு 28 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைகிறது.
Samayam Tamil திருமணம் செய்தால் ரூ 25 லட்சம்..! 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சொகுசு கார் பரிசு...!


இதனால் அந்நாட்டின் எதிர்காலம் குறித்து தற்போது அந்நாட்டு அரசு கவலையடைந்துள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் படி 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்,3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் உள்ளவர்களுக்கு 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய அளவிலான கார் வாங்க 9 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 6.28 லட்சம் வழங்கப்படுகிறது.

Read More: காதலர்களை துரத்தும் சூர்யா..! என்ஜிகே டீசர் வெளியான சில நிமிடங்களில் வைரல்..!

மேலும் 40 வயதிற்கு கீழ் திருமணம் செய்பவர்களுக்கு ரூ25 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். அந்த தம்பதி 3 குழந்தைகள் பெற்றால் அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். எனவும் அறிவித்துள்ளது.

இது மட்டுமல்ல மக்கள் தொகை எண்ணிக்கையை கூட்டி அந்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க மேலும் பல சிறு திட்டங்களையும் அறிவித்துள்ளார். அந்நாட்டின் தற்போது தலையான பணியாக மக்கள் தொகை எண்ணிக்கைய அதிகரிப்பதே என அவர் தெரிவித்துள்ளார்.

Read more: மன்மதனாக மாறி இலங்கை பெண்ணின் மீது அம்பு விட்ட மோடி..! இன்று நடந்தது காதல் திருமணம்..!

அடுத்த செய்தி