ஆப்நகரம்

பாதாள அறைக்குள் பல கோடி...! சிக்கிய விவசாயி பகீர் தகவல்...!

லண்டனில் பாதள அறைக்குள் கஞ்சாச்செடி வளர்த்தவரை போலீசார் தகுந்த ஆதரங்களுடன் கைது செய்தனர்.

Samayam Tamil 4 Sep 2019, 3:06 pm

லண்டன் டெப்ரோக்ஸ்டவ் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் பால்மர் இவர் தனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் கிடங்கு ஒன்றைக் கட்டியுள்ளார். அதில் விவசாய பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் பாதாள அறைகளையும் அமைத்துள்ளார். மேலும் அங்கு விவசாய பொருட்களைக் கொண்டு செல்லவும், எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்க மின் வசதியைச் செய்து செய்திருந்தார்.
Samayam Tamil பாதாள அறைக்குள் பல கோடி


விநாயகரை படம் எடுத்து பலருக்கு பாடம் எடுத்த இஸ்லாமிய பெண்..! - வைரலாகும் புகைப்படம்

பலர் அவர் காய்கறிகள், பழங்களைத் தான் அந்த இடத்தில் வைத்துப் பாதுகாத்து வருவதாகக் கருதினர். ஆனால் அவர் பாதாள அறைக்குள் இந்திய மதிப்பில் ரூ 3.35 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதை அறிந்து கொண்ட போலீசார் டேனியல் பால்மரை கைது செய்தனர்.

அடேங்கப்பா...! ஒரே பைக்குல இத்தனை பேரா? - வைரலாகும் வீடியோ

முதலில் அவர் கஞ்சா செடி வளர்ப்பு பற்றித் தெரியாது எனக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவர் தான் வளர்த்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்ததால் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு அந்நாட்டு கோர்ட் 6 வருடம் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அடுத்த செய்தி