ஆப்நகரம்

உண்மையாக சூப்பர் ஹீரோவாகிய தந்தை..! வெறும் கையால் சுறா மீனிற்கு "பஞ்ச்" விட்டு மகளை காப்பாற்றிய பரபரப்பு சம்பவம்

நாம் அனைவருக்கும் நமது அப்பா தான் ஹீரோ. அவர் நமக்காக செய்த பல தியாகம் மற்றும் உழைப்பு தான் நம்மை இந்த இடத்தில் இருக்க வைத்திருக்கிறது.

Samayam Tamil 5 Jun 2019, 6:57 pm
நாம் அனைவருக்கும் நமது அப்பா தான் ஹீரோ. அவர் நமக்காக செய்த பல தியாகம் மற்றும் உழைப்பு தான் நம்மை இந்த இடத்தில் இருக்க வைத்திருக்கிறது.
Samayam Tamil வெறும் கையால் சுறா மீனிற்கு பஞ்ச் விட்டு மகளை காப்பாற்றிய பரபரப்பு சம்பவம்


சமீபத்தில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நடந்த சம்பவம் உண்மையிலேயே ஒரு தந்தை, தன் மகளை காப்பாற்றி ஹீரோ ஆக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சார்லி என்ற தீயனைப்பு வீரர் தன் குடும்பத்தினருடன் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த கடலில் புல் ஷார்க் எனப்படும் சுறாமீன்கள் அதிகம் இருக்கிறது. பொதுவாக அந்த மீன்கள் கரைப்பகுதிக்கு வந்து தான் தன் இரையை தேடும்.

அப்படியாக ஒரு மீன் வந்து கடல் தன்னீரில் இருந்த சார்லியின் மகள் பைஜ் காலை கவ்வியது. உடனடியாக சதூர்யமாக செயல்பட்ட சார்லி தன் மகளை மீட்க நேரடியாக களத்தில் சில நொடிகளில் இறங்கினார்.

தமிழ் சினிமா பாணியில் அந்த மீனிற்கு தன் கையாலேயே 5 குத்து விட்டார். பைஜ் காலை சுறாவீன் கவ்வியதால் அவர் அலறி கொண்டிருந்தார். நடப்பது என்ன என சுற்றி இருந்தவர்கள் பார்த்தனர். அவர்களுக்கு இந்த சம்பவம் புரிவதற்கு முன்பே சார்லி சுறாவிற்கு விட்ட குத்தில் சுறா தெறித்து ஓடியது.

தற்போது பைஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகளை காப்பாற்ற தந்தை ஹீரோவான கதைதற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி