ஆப்நகரம்

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை ஏமாற்றி 49 குழந்தைகளை பெற்ற டாக்டர்

டாக்டரிடம் நடத்திய விசாரணையில் இதுவரை அவர் சட்டவிரோதமாக தனது விந்தணுக்களை பெண்களின் கருமுட்டைக்குள் செலுத்தியதன் மூலம் இதுவரை 49 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது

Samayam Tamil 16 Apr 2019, 4:48 pm
நெதர்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டச்சு நாட்டை சேர்ந்த ஒரு டாக்டர் பணியாற்றி வந்தார். அவர் அந்த மருத்துவமனை கருத்தரிப்பு பிரிவில் டாக்டராக இருந்து வருகிறார்.
Samayam Tamil பெண்களை ஏமாற்றி 49 குழந்தைகளை பெற்ற டாக்டர்


இந்நிலையில் அவர் தன்னிடம் செயற்கை கருதரிப்பிற்காக வரும் பெண்களிடம் அவர்களின் அனுமதியின்றி தன்னுடைய விந்தணுக்களை அவர்களின் கருவிற்குள் செலுத்தி அவர்களை கருவுற்று குழந்தை பெற்றெடுக்க செய்துள்ளார்.
Read More: ஆன்லைனில் வைரல் ஆக வேண்டும் என குடிபோதையில் ஆணுறுப்பை அறுத்த இளைஞர்...!

இந்த டாக்டரின் குழந்தையை செயற்கை கருத்தரித்தல் மூலம் பெற்ற பெண் ஒருவர் தனது குழந்தையின் செயல்பாடுகள் சில டாக்டரின் செயல்பாடுகளை ஒத்துள்ளதால் சந்தேகமடைந்தார். இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு அந்த பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Read More: ஆடையின்றி நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற 3 பெண்கள் கைது ; என்ன காரணம் தெரியுமா?

இதையடுத்து குழந்தைக்கும் டாக்டருக்கும் மரபணு சோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அந்த டாக்டரின் விந்தணுவில் பிறந்த குழந்தை தான் அது என உறுதியானது.
Read More: ஆபாச புத்தகங்கள், சிடிக்களை தீயில் போட்டு கொளுத்தியதால் பெற்றோருக்கு மகன் கொடுத்த நூதன தண்டனை...!

இதையடுத்து டாக்டரிடம் நடத்திய விசாரணையில் இதுவரை அவர் சட்டவிரோதமாக தனது விந்தணுக்களை பெண்களின் கருமுட்டைக்குள் செலுத்தியதன் மூலம் இதுவரை 49 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த டாக்டரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த செய்தி