ஆப்நகரம்

வெளிநாட்டினரை 500 முறை SORRY என எழுத வைத்த போலீசார்.... ஏன் தெரியுமா?

ஊரடங்கை மதிக்காத வெளிநாட்டிவருக்கு 500 முறை சாரி என எழுதச்சொல்லி போலீசார் தண்டனை வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 13 Apr 2020, 11:21 am
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது மக்கள் எல்லாம் அத்தியாவசியத தேவைகளை தவிர்த்து மற்ற எதற்காகவும் வீட்டை விட்டுவெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil forginers sorry


இந்நிலையில் உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 10 வெளிநாட்டினர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் வெளியில் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க தவறியுள்ளனர். இவர்களை கண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத் குமார். இவர்களை பிடித்து நூதன தண்டனையை வழங்கியுள்ளார்.

Also Read : ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....

அதன்படி இவர்களுக்கு ஒரு பேனா பேப்பர் வழங்கப்பட்டு அதில் ஆளுக்கு 500 முறை "SORRY"என ஆங்கிலத்தில் எழுதச்சொல்லி தண்டனை வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது போல வெளிநாட்டினருக்கு போலீசார் தண்டனை வழங்கிய செய்தி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி