ஆப்நகரம்

இந்தியாவை தொட்டால் பாக்., நொடிப்பொழுதில் காலி...! : முஷரஃப்

ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் பாக்., முன்னாள் அதிபர் முஷரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது இந்திய - பாக்., இடையேயான உறவு அபாய கட்டத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவுடன் பாக்., போர் நடத்துவது என்பது மிகவும் அபாயகரமானது என கூறினார்.

Samayam Tamil 27 Feb 2019, 5:55 pm
ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் பாக்., முன்னாள் அதிபர் முஷரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது : "இந்திய - பாக்., இடையேயான உறவு அபாய கட்டத்தில் உள்ளது. இருநாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்தியாவுடன் அனுஆயுத போர் நடத்துவது என்பது மிகவும் அபாயகரமானது.
Samayam Tamil former pakistan president general pervez musharraf says india will smash pakistan
இந்தியாவை தொட்டால் பாக்., நொடிப்பொழுதில் காலி...! : முஷரஃப்


Read More: சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் பாக்.,ராணுவத்திடம் சிக்கினாரா?
இந்தியா மீது பாக். ஒரு அணுகுண்டை போட்டால் இந்தியா சற்றும் தாமதிக்காமல் அவர்களிடம் உள்ள படைகளை பயன்படுத்தி பாக்., மீது 20 அணுகுண்டுகளை போட்டு பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்தததற்கான தடமே இல்லாமல் செய்து விடும். பாகிஸ்தான் இந்தியாவை, பாகிஸ்தானிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அழிக்க வேண்டும் என்றால் சுமார் 50 அணுகுண்டுகளை அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போட வேண்டும் ஆனால் அதற்கு இந்தியாவிடம் உள்ள பாதுகாப்பு அமைப்பு பெரிய தடையாக இருக்கும் பாக்., அனுஆயுத்தை இடம் நகர்த்தினாலே இந்தியா சுதாரித்துவிடும். அதனால் இரு நாடுகளும் அணு ஆயுத சண்டை போடும் அளவிற்கு செல்லக்கூடாது. " என கூறினார்.

அடுத்த செய்தி