ஆப்நகரம்

Aliko Dangote: 74 ஆயிரம் கோடி சொத்து இருந்தும் இவருக்கு இருந்த விநோத ஆசை என்ன தெரியுமா?

இந்தியாவில் பணமதிப்பிழப்பு வந்தவுடன் பலர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க ஆர்வமாய் இருந்தனர்.

Samayam Tamil 8 Apr 2019, 6:20 pm
இந்தியாவில் பணமதிப்பிழப்பு வந்தவுடன் பலர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க ஆர்வமாய் இருந்தனர். அந்த பணத்துடன் போட்டோ எடுத்து சமூகவலைதளத்தில் எல்லாம் பதிவிட்டனர். பணம் என்றால் யாருக்கு தான் ஆசையாக இருக்காது.
Samayam Tamil 74 ஆயிரம் கோடி சொத்து இருந்தும் இவருக்கு இருந்த விநோத ஆசை


நீங்கள் ஒரே இடத்தில் கோடி கணக்கில் குறைந்த பட்சம் லட்சங்களிலாவது பணத்தை மொத்தமாக பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்தால் அது எப்படி இருக்கும்? மொத்தமாக பணத்தை பார்த்தால் நம் மனதில் எப்படி ஒரு சந்தோஷம் ஏற்படும்? இதே கேள்வி நைஜிரியாவை சேர்ந்த அலிஸியோ என்பவருக்குள் எழுந்துள்ளது.
Read More: விமானத்தில் ராப் சாங்...! பயணிகளின் கவனத்தை ஈர்த்த வைரல் வீடியோ..!

இவர் ஆப்ரிக்காவின் மிக பெரிய பணக்காரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு என்பது இந்திய ரூபாயில் 74 ஆயிரம் கோடியாகும். அவருக்கு பெரிய அளவிலான பணத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

Read More: : சென்னையில் சுற்றி திரிந்த சூடான் இளைஞர்...! சொந்த காசில் சூடானிற்கே அனுப்பி வைத்த போலீஸ்...!

இதையடுத்து ஒரு நாள் தான் கணக்கு மேலாண்மை செய்துவரும் வங்கி சென்றார். அங்கிருந்து தனது வங்கியில் இருந்த 10 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ6.92 கோடியை பணமாக எடுத்தார். அவ்வளவு பணத்தை அவர் வங்கியிருந்து பணமாக எடுத்ததுமே வங்கி நிர்வாகமே ஆடிபோய் விட்டது இவ்வளவு தொகை இவருக்கு ஏன் பணமாக தேவைப்படுகிறது என வங்கி ஊழியர்கள் குழம்பினர். ஆனால் அவர் வேண்டும் என கேட்டதால் வேறு வழியின்றி அந்த பணத்தை அவரிடம் கொடுத்தனர்.

Read More: குபீர் சிரிப்பை கிளப்பும் பா.ஜ., வின் போலி தேர்தல் அறிக்கை...! யாரு பார்த்த வேலைடா இது?

அதை தனது காரில் எடுத்து சென்று வீட்டில் ஒரு நாள் முழுவதும் வைத்து அதை பார்த்துக்கொண்டே இருந்தார். அதன் பின் மறுநாளே அந்த பணத்தை வங்கிக்கு கொண்டு வந்து செலுத்தி விட்டார்.

இது குறித்து அலிஸியோ கூறும்போது இதை பார்த்தபின்பு தான் பணக்காரன் என என்னால் உணர முடிகிறது வேறும் பேப்பரில் என்ன நம்பர் இருக்கிறது என பார்ப்பதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. என கூறினார்.

அடுத்த செய்தி