ஆப்நகரம்

நடுரோட்டில் சாமியாடிய பெண்; நாயை கண்டதும் "ஷாக்" - வைரலாகும் வீடியோ

நடுரோட்டில் சாமியாடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் நாயை கண்டதும் ஷாக் ஆன வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 8 Jan 2020, 10:26 am
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் பக்தர்களுக்கு சாமி வருவது எல்லோரும் பார்த்திருப்போம். திருவிழாவில் பூஜை நடக்கும்போது சிலர் சாமி ஆடுவார்கள். இப்படியாக ஒரு பெண் ரோட்டில் நடப்பட்டிருந்த ஒரு திரிசூலத்தைப் பார்த்த நடுரோட்டில் சாமி ஆடுகிறார்.
Samayam Tamil dog viral video


சாமி ஆடும் அந்த பெண்ணை நோக்கி திடீரென நாய் ஒன்று வருகிறது நாயைப் பார்த்த அந்த பெண் ஒரு நிமிடம் ஷாக்காகி அந்த நாயை விரட்டிவிட்டு மீண்டும் சாமியாடுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Also Read : சாக்லேட் கொடுத்தே 10 அடுக்கு பாதுகாப்பை மீறி ரூ700 கோடி வைரங்களை திருடிய கொள்ளையர்கள்...! ஹாலிவுட் திரைப்படங்களையே மிஞ்சிய பரபரப்பு சம்பவம்

சாமி ஆடுவது என்பது ஒரு மெய் மறந்த நிலை என எல்லோரும் கூறி வரும் நிலையில் சிலர் சாமியாடுவதாகக் கூறி இப்படியும் ஏமாற்றி வருகிறார்களா சமூகவலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

அடுத்த செய்தி