ஆப்நகரம்

ஒரு நாய்க்காகவா இந்த பெண் இப்படி செய்தார்? நம்பவே முடியவில்லையே...!

கோவையில் தன் அப்பாவிற்கு தான் வளர்க்கும் நாய் பிடிக்காததால் அவருடன் சண்டைபோட்ட மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 1 Nov 2019, 12:53 pm
கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. 23 வயது இளம் பெண்ணான இவர் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார்.
Samayam Tamil ஒரு நாய்க்காகவா இந்த பெண் இப்படி செய்தார்


இவரது தந்தை பெருமாள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் வீட்டில் பெருமாள் தூங்கிக்கொண்டிருந்த போது, கவிதா வளர்த்து வந்த நாய் விடாமல் குறைத்துக்கொண்டு இருந்தால் பெருமாளால் தூங்கி முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால் எரிச்சலைடைந்த பெருமாள் நாயை எங்கேயாவது கொண்டு விடுவது என முடிவு செய்தார். ஆனால் கவிதா அதை தடுத்துவிட்டார். இதனால் கவிதாவிற்கு அவரது தந்தை பெருமாளுக்கும் சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

Also Read : No Shave Memes: வைரலாகும் நோ ஷேவ் நவம்பர் மீம்ஸ்...!

இதனால் மனவேதனையில் இருந்துள்ளார் கவிதா. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் அப்பா, அம்மா, பாட்டி, தம்பி ஆகியோருக்கு "சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்" என கடிதம் எழுத வைத்திருந்தார்.

கவிதா தூங்கில் தொங்கியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read : முட்டை வாங்கி தராததால் கணவனை கழட்டிவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி

தான் நாய் வளர்ப்பது அப்பவிற்கு பிடிக்கவில்லை என்பதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அடுத்த செய்தி