ஆப்நகரம்

ahmedabad : விமானத்திற்குள் புகுந்த புறா - வைரலாகும் வீடியோ

ஆமதாபாத் விமானத்திற்குள் புறா ஒன்று வந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 2 Mar 2020, 10:09 am
ஆமதாபாத் - ஜெய்ப்பூர் இடையே கோ ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த விமானம் சமீபத்தில் ஆமதாபாத்திலிருந்து கிளம்பத் தயாரானது விமானத்தில் பயணிகள் ஏறி விமானத்தின் கேட் மூடப்பட்ட போது விமானத்தின் உள்ளே புறா ஒன்று அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil piegon


சிலர் அந்த புறாவைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் யாராலும் பிடிக்க முடியவில்லை. பின்னர் விமானத்தின் கேட் திறக்கப்பட்டது. சில நிமிடம் கழித்து புறா தானாக விமானத்திலிருந்து வெளியே சென்றது. அதன் பின் விமானத்தின் கேட் மீண்டும் அடைக்கப்பட்டு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால் மொத்தம் 30 நிமிடம் விமானம் தாமதமாகக் கிளம்பியது. இதில் சிலர் விமானத்திற்குள் இரண்டு புறா பறந்ததாகவும் சிலர் ஒரு புறா மட்டுமே பறந்ததாகவும் சொல்லுகிறார்கள் எது உண்மை என்பது தெரியவில்லை.


Also Read : " பிகினி கில்லர் " உலகையே உலுக்கிவிட்டு இன்று சிறையில் கம்பி எண்ணும் சீரியல் கில்லரின் வரலாறு
விமானத்திற்குள் புறா வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி