ஆப்நகரம்

சாமி சிலைகளுக்கு முகமுடி..! வெடித்தது அடுத்த சர்ச்சை...

டில்லியில் உள்ள காற்று மாசு காரணமாக அங்குள்ள மக்கள் முகமுடியுடன் ரோட்டில் நடமாடி வரும்நிலையில் அங்குள் கோவில்களுக்கு சாமி சிலைகளுக்கு மாஸ்க் போடப்பட்டுள்ளது இது குறித்து விரிவான செய்தியை கீழே காணுங்கள்.

Samayam Tamil 7 Nov 2019, 10:17 am
டில்லியில் உள்ள காற்று மாசு காரணமாக அங்குள்ள மக்கள் முகமுடியுடன் ரோட்டில் நடமாடி வரும்நிலையில் அங்குள் கோவில்களுக்கு சாமி சிலைகளுக்கு மாஸ்க் போடப்பட்டுள்ளது இது குறித்து விரிவான செய்தியை கீழே காணுங்கள்.
Samayam Tamil gods wear air pollution masks in varanasi
சாமி சிலைகளுக்கு முகமுடி..! வெடித்தது அடுத்த சர்ச்சை...


காற்று மாசு

தீபாவளி முடிந்தது முதல் டில்லியில் காற்று மாசு அதிகரித்து விட்டது. இதனால் மக்கள் வீதிகளுக்கு வரும்போது மாஸ்க் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதிலிருந்து தப்பிக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

முகமுடி

இந்நிலையில் தற்போது டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் மக்கள் எல்லாம் தற்போது முகத்தில் முகமுடி அணிந்தே ரோட்டில் நடமாடி வருகின்றனர்.

சாமி சிலைக்கு முகமுடி

இந்நிலையில் வாரணாசியில் உள்ள சிவன், துர்கா, காளி, ஆஞ்சநேயர் சிலைகளுக்கு முகமுடி அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Also Read : சீனப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த சேலம் டாக்டர் ; தமிழ் கலாச்சாரத்தில் நடந்த திருமணம்

Twitter-पर्यावरण की भयावह स्थिति को देखते हुए वाराणसी के स...

கோவில் நிர்வாகம் விளக்கம்

இது குறித்து கோவில் நிர்வாிகளிடம் கேட்ட போது அவர்கள் : "கோவில் மூலவருக்கு ஒவ்வொரு பருவ காலத்தின் போதும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்வோம். கோடைகாலங்களில் சந்தனம் பூசி குளுமைப்படுத்துவோம். குளிர்காலங்களில் கம்பளி போர்த்துவோம். தற்போது காற்று மாசு அதிகரித்துள்ளதால் முகமுடி அணிவித்துள்ளோம்.

Also Read : அட கடவுளே... ! திருவள்ளுவருக்கு இத்தனை உருவங்கள் இருக்கிறதா?

விழிப்புணர்வு

கோவில்களுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் இதை பார்த்து விழிப்புணர்வு அடைந்து தங்களை காற்று மாசுவில் இருந்து காக்க முகமுடி அணிவார்கள் என நினைத்து இதை செய்துள்ளோம்" என கூறியுள்ளார்.

வைரலாகும் புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது

அடுத்த செய்தி