ஆப்நகரம்

லண்டன் Blenheim Palace -ல் இருந்த "அமெரிக்கா" எனும் தங்க டாய்லெட் திருட்டு

லண்டன் பெலன்ஹெம் அரண்மனையில் இருந்த அமெரிக்கா எனும் பெயர் கொண்ட தங்க டாய்லெட்டை மர்ம நபர்கள் திருடுச்சென்றுள்ளனர்.

Samayam Tamil 16 Sep 2019, 3:21 pm

லண்டனில் உள்ள பெலன்ஹெம் அரண்மனை மிகப் பிரபலமானது. முன்னால் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த அரண்மனை இது. பல கோடி மதிப்பிலான பொருட்கள் எல்லாம் இந்த அரண்மனையில் இருக்கிறது. இந்த அரண்மனை தற்போது சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்த அரண்மனையை யுனெஸ்கோ உலக புராதன சின்னமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil லண்டன் Blenheim Palace -ல் இருந்த  அமெரிக்கா  எனும் தங்க டாய்லெட் திருட்டு


இந்த அரண்மனையில் சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்பு மொரிஸியோ கேட்டிலன் வடிவமைத்த 18 கேரட் தங்கத்தால் ஆன டாய்லெட் ஒன்று உள்ளது. இந்த டாய்லெட்டிற்கு "அமெரிக்கா" எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த டாய்லெட்டிற்கு இவ்வாறு பெயர் வைத்ததே பெயரில் அளவில் பேசப்படும் விஷயமாக இருந்தது.

சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் இந்திய மதிப்பில் சுமார் ரூ8.8 கோடி மதிப்பிலான அந்த டாய்லெட் தற்போது திருடு போய்விட்டது. ஆம் நீங்கள் படித்தது உண்மை தான் யாரோ சிலர் தங்கத்தால் ஆன டாய்லெட்டைத் திருடி விட்டனர்.

பாட்டுப்பாடியே இணையத்தை கலக்கும் ஸ்ரீ சகோதரிகள் - வைரலாகும் விடியோக்கள்

இது திருடு போனது குறித்து அந்த அரண்மனை நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வைரலாக பரவியது.

இது குறித்து இதை டிசைன் செய்த மொரிஸியோ கேட்டிலன் ஒரு காமெடியான அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் : "இதைத் திருடியவர்களே இதை நீங்கள் படித்துக்கொண்டிருந்தால், இந்த தங்க டாய்லெட் எப்படி இருந்தது என எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதே நேரத்தில் அதை உங்கள் காலைக் கடனை கழுத்தில் ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டிருந்தனர்.

இணையத்தில் வைரலாகும் பிரேக் டான்ஸ்..! - சிரிப்பை அடக்க முடியாதவர்கள் பார்க்க வேண்டாம்...!

இந்த தங்க டாய்லெட் அந்த அரண்மனையின் மிக முக்கிய காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தங்க டாய்லெட் திருடு போன சம்பவத்திற்கு பிறகு அந்த அரண்மனைக்குள் தற்காலிகமாகப் பார்வையாளர்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது.

கல்யாண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு "பில்" அனுப்பிய பெண் வீட்டார்...! சமூகவலைத்தளத்தில் புலம்பல்

இது குறித்து தாமஸ் வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை நடந்த விசாரணையில் திருட்டு சம்பவத்திற்காக இரண்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கண்டு பிடித்துள்ளனர். இதைத் திருடியவர்களை விரைவில் பிடித்துத் தங்க டாய்லெட்டை மீட்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி