கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பலர் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் சில பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் செய்துக்கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. சில மாநிலங்கள் திருமணத்தை ரத்து செய்யவும் தள்ளி வைக்கவும் கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களே பலர் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றி வராத நிலையில் ஒரு திருமண ஜோடி சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் செய்துள்ளது நெட்டில் வைரலாகி வருகிறது.
பீகாரில் உள்ள பெகுசாராயை சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்துக்கொள்ளும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளனர். எனவே மணமகன் கீர்த்தேஷ் குமார் மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி மணமகளான ஜோதி குமாரிக்கு மாலை அணிவித்துள்ளார். அதை படத்தில் காணலாம்.
வீடியோ:
அதே நேரத்தில் அவர்கள் முகமூடிகளையும் அணிந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த நகரில் பெரிய பேச்சுப்பொருளாக மாறியது. சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை அவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தியதற்காக பலரால் மிகவும் வெகுவாக பாராட்டப்பட்டனர். இந்த தனித்துவமான திருமணம் எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும் என மணமகன் கூறுகிறார்.
இந்த திருமண விழாவில் 50க்கும் குறைவான நபர்களே கலந்துக் கொண்டதாகவும் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றியே திருமணம் நடைப்பெற்றதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏப்ரல் 30 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்றது.
கொரோனா காலத்தில் புரட்சிகரமாக நடந்த இந்த திருமணம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பலரும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
பீகாரில் உள்ள பெகுசாராயை சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்துக்கொள்ளும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளனர். எனவே மணமகன் கீர்த்தேஷ் குமார் மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி மணமகளான ஜோதி குமாரிக்கு மாலை அணிவித்துள்ளார். அதை படத்தில் காணலாம்.
வீடியோ:
அதே நேரத்தில் அவர்கள் முகமூடிகளையும் அணிந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த நகரில் பெரிய பேச்சுப்பொருளாக மாறியது. சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை அவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தியதற்காக பலரால் மிகவும் வெகுவாக பாராட்டப்பட்டனர். இந்த தனித்துவமான திருமணம் எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும் என மணமகன் கூறுகிறார்.
இந்த திருமண விழாவில் 50க்கும் குறைவான நபர்களே கலந்துக் கொண்டதாகவும் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றியே திருமணம் நடைப்பெற்றதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏப்ரல் 30 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்றது.
கொரோனா காலத்தில் புரட்சிகரமாக நடந்த இந்த திருமணம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பலரும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.