ஆப்நகரம்

மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் இரண்டாவது முறை ஓட்டம்... கண்ணை மறைத்த காதல்

கடந்த ஜனவரி மாதம் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓடிய நிலையில் மீண்டும் அவர்கள் ஓடிப்போன சம்பவம் நடந்துள்ளுது.

Samayam Tamil 3 Mar 2020, 11:32 am
கடந்த ஜனவரி மாதம் சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலானது. அந்த செய்தி எல்லோரையும் தலைப்பைப் படித்த உடனேயே சிரிக்க வைத்துவிட்டது. அந்த செய்தியில் தலைப்புகளில் பெரும்பாலான ஊடகங்களில் இப்படி தான் இருந்தன "மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் திருமணத்திற்கு முன்பு ஓட்டம்".
Samayam Tamil marriage old


அதாவது ஒரு பையனுக்கும் பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் காதல் வயப்பட்டு இருவரும் இந்த தம்பதியின் திருமணத்திற்கு முன்பு வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இந்த விவகாரம் குஜராத்தில் நடந்தது.

இந்த சம்பவம் நடந்ததும் சமூகவலைத்தளங்களில் இந்த சம்பவம் வைரலாகப் பரவியது. இந்நிலையில் இரு குடும்பத்தாரும் இருவரையும் தேடினர். அப்பொழுது தான் இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்துப் பக்கத்து வீட்டிலிருந்துள்ளனர். இவர்களுக்குள் முன்பே பழக்கம் இருந்துள்ளது. அப்பொழுது இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். ஏதோ காரணத்திற்காகத் திருமணம் செய்ய முடியாமல் போயுள்ளது.

Also Read : " பிகினி கில்லர் " உலகையே உலுக்கிவிட்டு இன்று சிறையில் கம்பி எண்ணும் சீரியல் கில்லரின் வரலாறு

இந்நிலையில் இவர்கள் மீண்டும் சந்தித்த போது தங்கள் காதலைப் புதுப்பித்துக்கொண்டனர். இந்த காதல் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிக்கூடக் கவலைப்பட வைக்காமல் தங்கள் இல்லாத எதிர்காலத்தைத் தேடிச்செல்லத் தூண்டியுள்ளது. இதனாலேயே இருவரும் ஓடிச்சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஓடிச்சென்று 17 நாட்களில் இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் அவர்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துவந்தனர்.

ஆனால் இவர்களாக ஒருவரைப் பிரிந்து ஒருவரால் இருக்க முடியவில்லை. என்னதான் குடும்பம் கண்முன் இருந்தாலும் காதல் அவர்கள் கண்களை மறைத்துவிட்டது. இந்நிலையில் இருவரும் தற்போது மீண்டும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். இந்த முறையும் இவர்கள் இருக்கும் இடத்தை இருவீட்டாரும் தேடி வருகின்றனர். இந்த செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி